ராஜஸ்தானில் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் : உண்மையை வெளியிட்டது தமிழக காவல்துறை

டிசம்பர் 26

ராஜஸ்தான் மாநிலத்தில் கொள்ளையனை பிடிக்கச் சென்றபோது உடன்சென்ற ஆய்வாளர் முனிசேகர் தவறுதலாக சுட்டதில் மதுரவாயல் ஆய்வாளர் பெரியபாண்டியன் மரணம் அடைந்ததாகத் தமிழக காவல்துறை இன்று அறிவித்துள்ளது.

சென்னை கொளத்தூரில் உள்ள நகைக்கடை ஒன்றில் நடந்த கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளான நாதுராம் உள்ளிட்ட 2 பேரை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் கடந்த 8-ந்தேதி ராஜஸ்தான் மாநிலம் சென்றனர். கொளத்தூர் ஆய்வாளர் முனிசேகர், மதுரவாயல் ஆய்வாளர் பெரியபாண்டியன், போலீஸ் ஏட்டுகள் எம்புரோஸ், குருமூர்த்தி, முதல்நிலை காவலர் சுதர்சன் ஆகியோரும் உடன் சென்று இருந்தனர்.  ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டம் ஜெயத்ரன் தாலுக்கா ராமாவாஸ் கிராமம் தான் பயங்கர கொள்ளையன் நாதுராமின் சொந்த ஊர் ஆகும்.

ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள செயல்படாத தொழிற்சாலை கட்டிடம் ஒன்றில் பதுங்கி இருந்த நாதுராமை பிடிக்க ஆய்வாளர்கள் பெரியபாண்டியன், முனிசேகர் ஆகியோர் தங்களுடன் வந்திருந்த 3 போலீசாருடன் சுற்றி வளைத்தனர்.  இந்நிலையில், ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்டார். ஆய்வாளர் பெரியபாண்டியனை ஆய்வாளர் முனிசேகரின் துப்பாக்கியால் தான் சுட்டுள்ளனர் என்றும், சுட்டது கொள்ளை கும்பலைச் சேர்ந்தவர்கள் தான் என்றும் சென்னை நகர உயர்போலீஸ் அதிகாரிகள் கூறினர். ஆனால், அந்த கொள்ளையன் யார்? என்பதை வெளியிடவில்லை.

இந்த நிலையில், பெரியபாண்டியனின் உடலில் பாய்ந்தது மற்றொரு ஆய்வாளர் முனிசேகரின் துப்பாக்கி குண்டு என ராஜஸ்தான் காவல்துறை  தெரிவித்தது. பெரிய பாண்டியனை காப்பாற்ற முயன்றபொழுது தவறுதலாக முனிசேகர் சுட்டுள்ளார் என பாலி மாவட்ட எஸ்.பி. கூறினார்.

இதனைத்தொடர்ந்து காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில் காவல் ஆய்வாளர் முனிசேகர் மீது ராஜஸ்தான் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

அஜாக்கிரதையாக இருந்ததன் மூலம் உயிரிழப்பு ஏற்படுத்தியதன் கீழ் முனிசேகர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆய்வாளர் பெரியபாண்டியனை காப்பாற்ற முயற்சித்தபோது முனிசேகர்தான் தவறுதலாக சுட்டது உறுதியாகியுள்ளது. ஆய்வாளர் முனிசேகர் தவறுதலாக சுட்டதாகச் சென்னை போலீசார் இன்று உறுதிப்படுத்தினர். முனிசேகர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து விசாரணைக்குப் பிறகு முடிவு எடுக்கப்படும் என தமிழக காவல்துறை கூறி உள்ளது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...