ஜெயலலிதா மரண விவகாரம் : தினகரன், கிருஷ்ணப்ரியாவுக்கு விசாரணை ஆணையம் சம்மன்


டிசம்பர் 27

ஜெயலலிதா மரணம் தொடர்பாக  எம்எல்ஏ தினகரன் மற்றும் இளவரசி மகள் கிருஷ்ணபிரியா, ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் ஆகியோருக்கு  நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

சென்னை ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கு முன்பாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருப்பது போன்ற வீடியோ வெளியாகிப் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் வெளியிட்டார். இது குறித்து ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திடம் புகார் கூறப்பட்டது. இது தொடர்பர்க விசாரணை ஆணையம் வெற்றிவேலுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அவர் நேரில் ஆஜராகி, வீடியோ தொடர்பான ஆதாரங்களை அளிக்க வேண்டும் எனவும் அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், எம்எல்ஏ தினகரன் மற்றும் இளவரசி மகள் கிருஷ்ணப்ரியா, ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் ஆகியோருக்கும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

அதில், தங்களிடம் உள்ள வீடியோ ஆதாரங்களை 7 நாட்களுக்குள் ஒப்படைக்குமாறு 3 பேருக்கும் விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணப்ரியா வரும் ஜனவரி 2-ல் நேரில் ஆஜராகவும், 2016ல் போயஸ் கார்டனில் வேலை பார்த்தவர்கள் விவரம், மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை சமர்ப்பிக்குமாறு பூங்குன்றனுக்கும் சம்மனில் கூறப்பட்டுள்ளது. இதேபோல, அப்பல்லோ மருத்துவர்கள் சத்யபாமா ஜனவரி 2ம் தேதியும், சுதா சேய்யன் ஜனவரி 3ம் தேதியும் நேரில் ஆஜராகவும் விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...