கார்-லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி : குழந்தைகள் உட்பட 6 பேர் படுகாயம்

கோவை, டிசம்பர் 27

திருப்பூர் அருகே கார் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியாகியுள்ளனர். 

கோவை சூலூர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (57). இவர் ரத்திஸ் (36) மற்றும் ரூபேஸ் (34) என்ற இருமகன்களின் குடும்பத்தினருடன் தஞ்சாவூரில் இருந்து கார் மூலமாக கோவை நோக்கி சென்று கொண்டிருந்தார். 

இதே போல் கோவியில் இருந்து கரூர் சாலையை நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. லாரியை சபாபதி (48) என்பவர் இயக்கிவந்தார். 

அந்த கார் வெள்ள கோவிலை அடுத்த ஓலப்பாளையம் என்ற பகுதி அருகே சென்ற போது நிலை தடுமாறி எதிரே வந்த லார் மீது மோதியது. 

இந்த விபத்தில் காரில் பயணித்த லட்சுமி (57), ரத்தீஸ் (36) சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் சபாபதி சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

இது குறித்து தகவலறிந்த ஓலப்பாளையம் போலீசார் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ரூபேஸ் (34) அவரது மனைவி சுமதி (32), குழந்தைகள் தீப்ஷிதா (7), லட்சுமி (2), அபிதேஷ் (7), திரோஷ் (5), மற்றும் ரத்தீஸ்-ன் மனைவி வீணா (30) ஆகிய 7 பேரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர். 

ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ரூபேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். தற்போது படுகாயமடைந்த 6 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...