டிச., 31-ம் தேதி நள்ளிரவு இந்து கோவில்களை திறக்க தடை வேண்டும்: உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

டிசம்பர் 27

ஆங்கில புத்தாண்டையொட்டி, இந்து கோவில்களை நள்ளிரவில் திறந்து பூஜை செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என வழக்கறிஞர் அஷ்வத்தாமன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், இந்தியா முழுவதிலும் உள்ள பல்வேறு மாநிலங்களில் ஆங்கில புத்தாண்டையொட்டி ஜனவரி 1-ந்தேதி அன்று கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடத்துவது வாடிக்கையானது. சில கோவில்களில் டிசம்பர் 31-ம் தேதி நள்ளிரவு நடை திறக்கப்பட்டு பூஜை நடத்துவது வழக்கம். ஆங்கில புத்தாண்டுக்கு வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்வது மற்றும் அதனை ஒரு விழாவைப் போல கொண்டாடுவது ஆகியவை இந்தியாவின் வேத கலாச்சாரம் கிடையாது. தெலுங்கு வருடப்பிறப்புதான் பொருத்தமான, சிறந்த கலாச்சாரம் ஆகும் என ஆந்திராவில் உள்ள கோவில்களில் புத்தாண்டு பூஜைகள் செய்யக் கூடாது என ஆந்திர மாநில அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் ஒரு அமைப்பு கூறியது.

எனவே, ஆகம விதிமுறைகளை மீறி நள்ளிரவில் கோவில் நடையைத் திறக்க கூடாது. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...