முன்அனுமதி இல்லாமல் கண்காட்சிகளை நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை : ஆட்சியர் எச்சரிக்கை

கோவை, டிசம்பர் 27

அனுமதி பெறாமல் பொருட்காட்சி மற்றும் கண்காட்சி நடத்தும் தனியார் நிறுவனங்கள் மற்றும் பொருட்காட்சி நடத்த இடம் வழங்கும் திருமண மண்டபங்கள், திறந்தவெளி மைதானத்தின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோவை மாவட்டத்தில் தனியார் பொருட்காட்சிகள் மற்றும் கண்காட்சிகள் நடத்தப்பட வேண்டுமாயின், தனியார் நிறுவனத்தின் பொருட்காட்சிகள் நடத்தப்படும் இடத்திற்கான அனுமதி கடிதம், காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சுகாதாரத்துறைகளிடமிருந்து தடையின்மைச் சான்று பெற்று, மூன்றாண்டுகளுக்கு வருமானவரி செலுத்தியற்கான வருமான வரிச்சான்று மற்றும் அரசால் நிர்ணயிக்கப்பட்ட தொகையினை பொருட்காட்சி நடத்தப்படும் நாட்களுக்குக் கணக்கிட்டு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வங்கி வரைவோலையாக செலுத்தப்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பம் தனியார் நிறுவனம் வாயிலாக வழங்கப்படுதல் வேண்டும்.

ஆனால், ஒரு சில தனியார் நிறுவனங்கள் தடையின்மைச் சான்றிதழ்கள் பெறாமல், திருமண மண்டபங்களின் உரிமையாளர்கள் உதவியுடன் உரியத் தடையின்மை சான்றிதழ்கள் பெறப்படாமலும்,  முதலமைச்சர்; பொதுநிவாரண நிதியினை அரசுக்கு செலுத்தப்படாமலும் பொருட்காட்சிகள் நடத்தப்படுவதாக அறிய வருகின்றது. அவ்வாறு நடத்தப்படுவதாகக் கண்டறியப்படும் பட்சத்தில் அத்தனியார் நிறுவனத்தின் மீதும், திறந்தவெளி மைதானத்தின் உரிமையாளர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், பொருட்காட்சி நடத்திட இடம் வழங்கும் சம்மந்தப்பட்ட திருமண மண்டபங்களின் உரிமை ரத்து செய்யப்படும்.

இதற்கு முன்னர் தனியார் நிறுவனங்கள் வாயிலாக 7 நாட்களுக்கு குறைவாக நடத்தப்படும் பொருட்காட்சிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வாயிலாக அனுமதி ஆணை வழங்கப்பட்டு வந்தது. தற்சமயம், அரசு செயலாளர் வெளியிட்டுள்ள அரசாணையில், கோவை மாவட்டத்தில் தனியார் பொருட்காட்சி நடத்தவுள்ள தனியார் நிறுவனங்களது விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியர் பரிந்துரையின்படி அரசுக்கு அனுப்பிவைத்து, செய்தித்துறையின் இயக்குநரின் ஆணைவரப்பெற்ற பின்னர் பொருட்காட்சி நடத்திக்கொள்ள அவ்வரசாணையின் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருட்காட்சி நடத்திடும் தனியார் நிறுவனங்கள் தங்களது விண்ணப்பத்துடன் உரிய தடையின்மைச் சான்றிதழ்கள், மூன்றாண்டுகளுக்கு வருமானவரி செலுத்தியதற்கான வருமானவரி சான்றிதழ்கள் மற்றும் (சென்னையில் செலுத்தத்தக்க வகையில்) முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வங்கிவரைவோலை ஆகியவற்றினை பொருட்காட்சி, கண்காட்சி நடைபெறும் 15 நாட்களுக்கு முன்னதாக மாவட்ட ஆட்சியர் பெயரில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் சமர்ப்பித்தல் வேண்டும். 

மேலும், பொருட்காட்சி, கண்காட்சி நடத்திட தடையின்மைச் சான்றிதழ்கள் வழங்கும் காவல்துறை, சுகாதாரத்துறை, தீயணைப்புத்துறையின் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் காலம் தாழ்த்தாமல்; தடையின்மை சான்றிதழ்கள் வழங்கிட அறிவுறுத்தப்படுகிறார்கள். 15 நாட்களுக்கு குறைவாக சமர்ப்பிக்கப்படும் தனியார் நிறுவனங்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. 

அதேபோல, அனுமதி வழங்கப்படும் திருமண மண்டபங்கள், திறந்தவெளி மைதானத்தின் உரிமையாளர்கள், பொருட்காட்சி நடத்தவுள்ள தனியார் நிறுவனங்கள் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சுகாதாரத்துறைகளிடமிருந்து தடையின்மை சான்றிதழ்கள் மற்றும் அரசிடமிருந்து அனுமதிக் கடிதம் பெறப்பட்டுள்ளதா என பரிசோதித்த பின்னரே பொருட்காட்சி நடத்திட அனுமதித்தல் வேண்டும்.

அரசிடமிருந்து அனுமதி பெறாமல் பொருட்காட்சி, கண்காட்சி நடத்தப்பட்டால் பொருட்காட்சி நடத்தும் தனியார் நிறுவனங்கள் மற்றும் பொருட்காட்சி நடத்திட அனுமதி வழங்கும் திருமண மண்டபங்கள் மற்றும் திறந்தவெளி மைதானத்தின் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...