குடியிருப்பு பகுதியில் நுழைந்த காட்டு யானை- பொதுமக்கள் பீதி

வால்பாறை எஸ்டேட் குடியிருப்பு பகுதியில் தொடர்ந்து யானைகள் நுழைந்து சேதம் செய்து வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.


வால்பாறை, டிசம்பர் 28

வால்பாறை எஸ்டேட் குடியிருப்பு பகுதியில் தொடர்ந்து யானைகள் நுழைந்து சேதம் செய்து வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் தொடர்ந்து பல மாதங்களாக காட்டு யானைகள் நுழைந்து வருகிறது. யானைகள், இரவு நேரங்களில் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் நுழைவதும் குடியிருப்புகளை இடிப்பதும், ரேசன் கடைகளை சூறையாடுவதும் வழக்கமான நிகழ்வாகி விட்டது.

இந்நிலையில், சோலையார் முதல் டிவிசனில் இன்று வழக்கம் போல் தோட்டத் தொழிலாளர்கள் காலை 7.55 மணியளவில் பணிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது பீல்டு எண் 8-ல் மறைவான இடத்தில் நின்று கொண்டிருந்த ஒற்றைக் காட்டு யானை பணிக்கு சென்று கொண்டிருந்த அழகம்மாள் (52) என்பவரை தும்பிக்கையால் தூக்கி வீசியது. இதனால் அவரது உடலில் பல்வேறு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே சக தொழிலாளர்கள் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் அவரை வால்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.



இதனிடையே, இந்தச்சம்பவம் குறித்து தகவலறிந்த மானாம்பள்ளி வனத்துறை அதிகாரிகள் சேகர், விஜயன் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் சோலையார் எஸ்டேட் பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சின்கோனா, நீரார்டேம், பன்னிமேடு, பாரளை போன்ற பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...