”டிச., 31-ம் தேதி நள்ளிரவு கோவில்களை திறக்கத் தடையில்லை”

புத்தாண்டு தினத்தில் நள்ளிரவில் கோவில்களை திறக்கத் தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

டிசம்பர் 28

புத்தாண்டு தினத்தில் நள்ளிரவில் கோவில்களை திறக்கத் தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் அஸ்வத்தாமன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறி இருப்பதாவது:- சைவ கோவில்கள் சிவராத்திரி அன்றும், வைணவ கோவில்கள் வைகுண்ட ஏகாதசி அன்றும் இரவு முழுவதும் திறந்து இருக்க வேண்டும். மற்ற நாட்களில், ஆகம விதிகளின் படி இரவு நேரத்தில் கோவில்கள் திறந்து வைக்கக்கூடாது. இரவு நேரங்களில் காற்றில் பிராணவாயுவின் அளவு குறைவாக இருக்கும் என்பதால், அதிகாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான பிரம்ம முகூர்த்தத்தில் கோவில் நடையைத் திறக்க வேண்டும். காலகாலமாக நம் மூதாதையர் இந்த நடைமுறையை உருவாக்கி பின்பற்றி வருகின்றனர். 

ஆனால், அண்மைக் காலங்களில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இந்து கோவில்கள் இரவு முழுவதும் திறந்து வைக்கப்படுகிறது. இதற்குத் தடை விதிக்க வேண்டும். இரவு நேரத்தில் கோவில்களை திறக்கக் கூடாது என்று இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் ஆஜராகி, ’இந்து கோவில்களை இரவு முழுவதும் திறந்து வைப்பது என்பது ஆகம விதிகளுக்கு எதிரானது. ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, பல இந்து கோவில்கள் இரவு முழுவதும் திறந்து வைக்கப்படுகிறது. அதுவும், இந்து சமய அற நிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில்களும் ஆகம விதிகளுக்கு எதிராக திறந்து வைக்கப்படுகிறது. கோவில்களை இரவு நேரங்களில் திறக்கக்கூடாது என்பதற்கு பல அறிவியல் ரீதியான காரணங்களும் உள்ளன’ என்று வாதிட்டார். 

அதற்கு நீதிபதிகள், புத்தாண்டை முன்னிட்டு இரவு நேரங்களில் கோவில்களை திறப்பது என்பது கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. 

இந்த நிலையில், கடைசி நேரத்தில் இந்த வழக்கை ஏன் தொடர்ந்துள்ளீர்கள்? எனவே, புத்தாண்டை முன்னிட்டு, இந்து கோவில்களை திறக்க இடைக்கால தடை எதுவும் விதிக்க முடியாது. இந்த வழக்கை வருகிற ஜனவரி 8-ந்தேதிக்கு தள்ளி வைக்கிறேன். அதற்குள் தமிழக இந்து சமய அறநிலையைத் துறை செயலாளர், ஆணையர் உள்ளிட்டோர் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...