நீலகிரி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: மின்சாரம் தாக்கி விவசாயி பலி, அ.தி.மு.க வினர் மீது பொது மக்கள் கடும் அதிருப்தி



நீலகிரி, டிசம்பர் 28

நீலகிரி மாவட்டத்தில் நாளை மறுநாள் நடக்கவிருக்கும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்காக வைக்கப்பட்டிருந்த கட்சிக் கொடிக் கம்பத்தில் மின்சாரம் பாய்ந்ததில் விவசாயக்கூலி ஒருவர் பலியாகியுள்ளார். 

நீலகிரி மாவட்டம் கொடப்பமந்து பகுதியை சேர்ந்தவர் பாபு (48). விவசாயக் கூலியான இவர் லாரியின் மூலம் தோட்டத்திற்கு வந்த உரத்தை இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அந்த பகுதியில் அ.தி.மு.க.வின் கொடி இரும்பு கம்பியில் கட்டி பறக்கவிடப்பட்டிருந்தது. 

அந்த இரும்புக்கம்பி மின்சார ஒயரில் உரசிக்கொண்டிருந்தது. 

இதை கவணிக்காத பாபு அந்த கொடிக்கம்பத்தின் மீது சாய்ந்தார். 

இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உடல்கருகி உயிரிழந்தார். 

விவசாயக்கூலியின்  உயிரிழப்புக்கு ஆளும் கட்சியினரின் அலட்சியமே காரணம் என்றும், உயிர்பலிக்கு காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கொடப்பமந்து பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இதன்பிறகே, பாபு-வின் மரணம் தொடர்பாக வழக்குப் பதியப்பட்டதாக தெரிகிறது.

கடந்த 3-ம் தேதி கோவையில் இவ்விழா கொண்டாடப்பட்டது. இதற்காக அவிநாசி சாலையில் அமைக்கப்பட்ட அலங்கார நுழைவு வாயிலில் மோதி ரகுபதி என்ற வாலிபர் பரிதாபமாக பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிரலைகளை உருவாக்கியது. 

சாலையை ஆக்கிரமித்து அலங்கார நுழைவு வாயில்கள் அமைத்ததே இவ்விபத்திற்கு காரணம் என்று பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வந்த நிலையில், டிப்பர் லாரி மோதியதால் தான் ரகுபதி பலியானார் என்று கூறி வழக்குப் பதிந்தது கோவை மாநகர காவல்துறை. 

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவின் போது கோவையில் வாலிபர் பலியானது போல், மீண்டும் ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார் என்றும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் என்ற பெயரில் அலட்சியப்போக்காக செயல்பட்டு, கோவை மற்றும் நீலகிரியில் இரண்டு உயிர்களை காவு வாங்கி விட்டனர் அ.தி.மு.க. வினர் என்று கடுமையான கண்டனங்கள் மக்களிடையே எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...