குப்பை தொட்டிகள் இல்லாத வார்டாக மாற்றுவது குறித்து 22-வது வார்டில் விழிப்புணர்வு பிரச்சாரம்

கோவை மாநகராட்சி 22-வது வார்டு ஆர்.எஸ்.புரம் பகுதியில் சூன்யா – பூஜ்ய கழிவு மேலாண்மை திட்டம் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை மாநகராட்சி ஆணையாளர் க.விஜயகார்த்திகேயன், தொடங்கி வைத்தார்.

கோவை, டிசம்பர் 29

கோவை மாநகராட்சி 22-வது வார்டு ஆர்.எஸ்.புரம் பகுதியில் சூன்யா – பூஜ்ய கழிவு மேலாண்மை திட்டம் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை மாநகராட்சி ஆணையாளர் க.விஜயகார்த்திகேயன், தொடங்கி வைத்தார். அவர், வீடுவீடாக சென்ற விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.

ஐரோப்பிய யூனியன் உதவியுடன் கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் 23-வது வார்டில் சூன்யா திட்டம் 3 வருடங்களுக்கு முன் செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் மேற்கண்ட வார்டில் உள்ள வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களிடமிருந்து மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பொதுமக்கள் ஒத்துழைப்புடன் தரம் பிரித்து பெறப்பட்டு, சாலைகளில் குப்பைகளை கொட்டக் கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வார்டில் உள்ள குப்பை தொட்டிகள் அகற்றப்பட்டு, குப்பை தொட்டிகள் இல்லாத வார்டாக மாற்றப்பட்டுள்ளது.



சுவிட்சர்லாந்து தூதரக அமைப்பு, கோவை மாநகராட்சியில் கெபாசிடீஸ் திட்டத்தின் கீழ் ஐசிஎல்இஐ (ICLEI) உடன் இணைந்து சூன்யா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டம் தற்பொழுது 22 மற்றும் 24-வது வார்டுகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பொதுமக்கள் தினமும், மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து மாநகராட்சி துப்புரவு பணியாளரிடம் கொடுப்பது பற்றி விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

இந்த விழிப்புணர்வு திட்டம் தன்னார்வ அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் செயல்படுத்தப்படும். தரம் பிரித்து சேகரிக்கும் இந்தத் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் போது, இந்த வார்டுகளில் உள்ள குப்பை தொட்டிகள் படிப்படியாக அகற்றப்பட்டு, குப்பைத் தொட்டிகள் இல்லாத வார்டுகளாக மாற்றப்படும். 

இந்நிகழ்ச்சியில் துணை ஆணையாளர் ப.காந்திமதி, செயற்பொறியாளர்கள் லட்சுமணன், சரவணன், மேற்கு மண்டல உதவி ஆணையர் எஸ்.வி.குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...