சாலைகளில் தோண்டப்பட்ட குழிகளை மூட நடவடிக்கை எடுக்காவிடில் முற்றுகைப் போராட்டம்: திமுக

கோவை, டிசம்பர் 30

கோவை - திருச்சி சாலையில் உள்ள நஞ்சப்பா நகர் குடியிருப்பில் கேபிள் பதிக்க தோண்டப்பட்டு ஒரு மாதமாக மூடப்படாமல் இருக்கும் குழிகளை உடனடியாக மூடாவிட்டால் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என திமுக மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், எம்எல்ஏவுமான நா.கார்த்திக் தெரிவித்துள்ளார். 

கோவை - திருச்சி சாலையில், குளத்தேரி அருகே நஞ்சப்பா நகர் குடியிருப்பு பகுதியில், கேபிள் பதிக்க தனியார் நிறுவனம் (ஏர்டெல்) மாநகராட்சியிடம் டெண்டர் எடுத்துள்ளது. இந்தப் பகுதியில் கேபிள் பதிக்க கடந்த 2 மாதங்களுக்கு முன்பு குழி தோண்டியுள்ளனர். இந்தப் பணிகள் முடிந்தும், தெருக்களில் உள்ள குழிகள் 2 மாதங்களாக மூடப்படாமல் உள்ளது. இதனால், குடிநீர் குழாய்கள் உடைந்ததாலும், குடிநீர் பிடிக்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இதுதொடர்பாக சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில், திமுக மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ-விடம் பொதுமக்கள் புகார் அளித்தனர். இதையடுத்து, எம்எல்ஏ நா.கார்த்திக் நஞ்சப்பா நகர் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பொதுமக்கள் அவரிடம் முறையிட்டனர். இதைத்தொடர்ந்து, எம்எல்ஏவின் வருகை குறித்து தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும், டெண்டர் எடுத்த நிறுவனமும் வருத்தம் தெரிவித்தது. இதையடுத்து அவர்கள் உடனடியாக குழியை மூடுவதாக உறுதியளித்தனர். 



இதுதொடர்பாக எம்எல்ஏ நா.கார்த்திக் கூறுகையில், கடந்த 2 மாதங்களுக்கு மேலாக இப்பகுதியில் குழி தோண்டப்பட்டு கிடக்கின்றது. இதேபோல, மாநகராட்சியில் பல பகுதிகள் இதே நிலையில் தான் உள்ளது. நஞ்சப்பா நகரில் உள்ள இந்த குழிகளை உடனடியாக மூடுவதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இந்த நடவடிக்கையை உடனடியாக எடுக்காவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம். என்றார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...