இளைஞர்களிடையே புதிய எண்ணங்களை உருவாக்கும் ”ஐடியத்தான் - 2017”

கோவை, டிசம்பர் 30

எஸ்என்எஸ் கல்விக் குழுமத்தின் சார்பில் இளைஞர்களிடையே புதிய எண்ணங்களை உருவாக்கும் விதமாக ”ஐடியத்தான் -2017” என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. 

எஸ்என்எஸ் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை ”தி யூத் ஃபார்ம்” மற்றும் ஸ்டார்ட்அப் பயணம் அமைப்பின் நிறுவனர் ஆர்.ஜி. நவின்கிருஷ்ணா மற்றும் எஸ்என்எஸ் கல்விக் குழுமத்தின் தொழில்நுட்ப இயக்குநர் நலின் சுப்ரமணியம் ஆகியோர் ”ஐடியத்தான் -2017” என்ற நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். 



இந்த நிகழ்ச்சியானது, மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே நல்ல உத்வேகம் அளிக்கக்கூடிய மற்றும் புதிய எண்ணங்களை உருவாக்கும் வகையிலான யோசனைகளை வழங்குபவர்களுக்கு பாராட்டு தெரிவித்து விருதுகள் வழங்கப்படுவதாகும். இதில், சுமார் 1,600 பேர் அடங்கிய 420 அணிகள் கலந்து கொண்டன. 3 நாட்களாக நடைபெற்ற இப்போட்டியில் 49 அணிகள் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.



தொடர்ந்து, 48 மணிநேரம் நடக்கும் இந்த இறுதிச்சுற்றுப் போட்டியில், வெற்றி பெறும் முதல் 10 அணிகளுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படும். முதல் 5 இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு ரொக்கம் வழங்கப்படும். நாளை நடைபெறும் இறுதிச்சுற்றில் வெற்றி பெறும் அணி, எஸ்என்எஸ் கல்விக் குழுமத்தின் தொழில்நுட்ப இயக்குநருடன் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும். 

இந்த நிகழ்ச்சி குறித்து பேசிய ”தி யூத் ஃபார்ம்” மற்றும் ஸ்டார்ட்அப் பயணம் அமைப்பின் நிறுவனர் ஆர்.ஜி. நவின்கிருஷ்ணா, இளைஞர்கள் மனதில் புதிய எண்ணத்தை உருவாக்கவும், பல ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை வெளிக்கொண்டு வருவதற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதன்மூலம் சமுதாயத்தில் நிலவும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும், தரமான வாழ்க்கையை வாழவும் முடியும்,. இவ்வாறு கூறினார். 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...