நீலகிரியில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

டிசம்பர் 30

நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின் போது, பல்வேறு அரசு துறைகளில் முடிவுபெற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.



உதகையில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின் கலந்து கொள்வதற்காகச் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கோத்தகிரி சந்திப்பில் அமைந்துள்ள எம்ஜிஆர் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து, செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட எம்ஜிஆர் புகைப்பட கண்காட்சியினைப் பார்வையிட்டார். பின்னர், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் அமைக்கப்பட்ட காய்கறி மற்றும் பழக்கண்காட்சியில், காய்கனிகளால் உருவாக்கப்பட்ட எம்ஜிஆர் திருவுருவத்தை கண்டார்.



உதகை, ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர், முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் திருவுருவப்படத்தை திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, பல்வேறு அரசு துறைகளில் முடிவுபெற்ற திட்டப்பணிகளையும் தொடங்கி வைத்தார்.



நிகழ்ச்சியில், ”நீலகிரி அகவை 200” குறுந்தகட்டினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். பின்னர், அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினர். நிகழ்ச்சியின் முடிவில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அவர் பரிசுகளை வழங்கிக் கவுரவித்தார்.



Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...