அரசியலுக்கு வருவது உறுதி, தனி கட்சி தொடங்குவேன்: நடிகர் ரஜினிகாந்த்


டிசம்பர் 31

தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

கடந்த ஒரு வாரமாக ரசிகர்களை சந்தித்து பேசி வரும் ரஜினி, இன்று கடைசி நாளில் ரசிகர்கள் மத்தியில் உரையாற்றினர். அப்போது அவர் பேசுகையில்,  அரசியலுக்கு வருவதில் எனக்கு பயமில்லை. ஊடகங்களை கண்டு மட்டுமே பயம்.  நான் அரசியலுக்கு வருவது உறுதி.

தனி கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவேன். வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் நான் தனிக்கட்சி ஆரம்பிக்கிறேன். நேரம் குறைவாக இருப்பதால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவில்லை. நான் அரசியலுக்கு வருவது காலத்தில் கட்டாயம்.

பழைய காலத்தில் ராஜாக்கள் அண்டை நாடுகளில் கொள்ளையடித்தனர். ஆனால் தற்போது சொந்த நாட்டிலேயே அரசியல்வாதிகள் கொள்ளையடிக்கின்றனர். இதனை தடுக்கும் விதமாக காவலர்கள் (தொண்டர்கள்) எனக்கு வேணும். அவர்களை செயல்பட வைக்கும் பிரஜையாக மட்டுமே நான் இருப்பேன். மாநிலம் முழுவதும் நமது மன்றங்கள் திறக்கப்பட வேண்டும். மன்றங்களில் ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள பெண்கள், இளைஞர்களை இணைக்க வேண்டும்

வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் நமது செயல்திட்டங்களை பொதுமக்களுக்கு கொண்டு சென்றடைய செய்ய வேண்டும். அறிவிக்கப்படும் திட்டங்களை செயல்படுத்தா விட்டால் 3 ஆண்டுகளில் ராஜினாமா செய்வேன். இவ்வாறு கூறினார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...