அனைத்து காவல் நிலையங்களிலும் நூலகங்கள் : கோவை மாவட்ட கண்காணிப்பாளர்

மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்ட எல்லைகளுக்குட்பட்ட அனைத்து காவல் நிலையங்களிலும் நூலகங்கள் அமைக்க இருப்பதாக மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர் Pa. மூர்த்தி செய்தியாளர்களிடம் இன்று கூறினார்.

கோவை, டிசம்பர் 31

மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்ட எல்லைகளுக்குட்பட்ட அனைத்து காவல்  நிலையங்களிலும் நூலகங்கள் அமைக்க இருப்பதாக மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர் Pa. மூர்த்தி செய்தியாளர்களிடம்  இன்று கூறினார்.

அவர் கூறுகையில் 'கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 33 காவல் நிலையங்கள் உள்ளன. இது தவிர 3 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் மற்றும் 3 போக்குவரத்து காவல் நிலையங்கள் உள்ளன. 

இந்த காவல் நிலையங்கள் அனைத்திலும் நூலகங்கள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

அனைத்து காவல் நிலையங்களிலும் உள்ள வரவேற்பு அறைகளிலும் நூலகங்கள் உருவாக்கப்பட உள்ளன. 

வரும் பொங்கல் தினத்தில் இருந்து செயல்பட இருக்கும் இந்த நூலகத்தில் போலீசார் மட்டுமல்லாது பொதுமக்களும் புத்தகங்களை எடுத்து படிக்கலாம். 

காவல்துறையில் பணியாற்றுபவர்களுக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியாக  நூலகங்கள் அமைக்கப்பட உள்ளன' என்றார்.

புத்தாண்டை முன்னிட்டு செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிக்கையாளர்களுக்கு புத்தகங்களை வழங்கி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர். .Pa. மூர்த்தி.

நாளை புத்தாண்டு தினம் கொண்டாடப்பட உள்ளது.  இதனையொட்டி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று காலை செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், கடந்த 2016 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் நடைபெற்ற விபத்துக்கள் மற்றும் குற்றசம்பவங்களின் எண்ணிக்கைகள் ஒப்பீடு செய்யப்பட்ட செய்திக்குறிப்புகள் வழங்கப்பட்டது. 

இதைத் தொடர்ந்து,  செய்தியாளர் சந்திப்பின் முடிவில் தான் எழுதிய 'பெண்மை வாழ்க' என்ற புத்தகத்தையும், தான் படித்த சில புத்தகங்களையும் செய்தியாளர்களிடம் வழங்கியதோடு, புத்தக வாசிப்பு திறனை வளர்த்துக்கொள்ள கூறி புத்தாண்டு தின வாழ்த்துக்களையும் தெரிவித்தார். 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...