கோவையில் புத்தாண்டு கொண்டாட வந்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி

கோவை, ஜனவரி.1: 

கோவையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக வந்த மூன்று மாணவர்கள் சலைவிபத்தில் சிக்கி பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் பகுதியை சேர்ந்தவர் ராகுல். கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றார்.

இவர் கோவையொ புத்தாண்டு கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவு திருப்பூரில் இருந்து தனது நண்பர்களுடன் கார் மூலம் கோவை நோக்கி வந்து கொண்டிருந்தார். 

அவர்களது கார் சூலூரை அடுத்த தென்னம்பாளையம் அருகே வந்த போது சாலையில் பஞ்சாராகி நின்று கொண்டு இருந்த லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. 

இந்த விபத்தில் காரில் வந்த ராகுல் , தாலிப், பிரசாத் ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

மேலும்,  படுகாயமடைந்த தியாகு என்பவர்  கோவை அரசு மருத்துவமனையிலும்,  நவீன், சதாம் உசேன், சுரேஷ், நவீன் நான்கு பேர் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து சூலூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கோவையில் நேற்று இரவு நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட  வாகன விபத்துகள் மற்றும் மோதல்களினால் காயமடைந்த 80 பேர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அம்மருத்துவமனையில் ஓரே நேரத்தில் ஏராளமானோர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருப்பதால் விபத்து மற்றும் காயசிகிச்சை பிரிவில் நெரிசல் அதிகரித்துள்ளது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...