ரயில் நிலையம் முன்பு நிறுத்தப்பட்ட ஆட்டோக்களை அகற்றினால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்: ஆட்டோ ஓட்டுநர்கள் மாநகர காவல்துறை ஆணையரிடம் மனு



கோவை, ஜனவரி 2




கோவை ரயில் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டுள்ள ஆட்டோக்களை அகற்றினால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணியினர் மாநகர காவல் துறை ஆணையரிடம் மனு அளித்தனர். 



இது குறித்து இந்து முன்னணியின் நிர்வாக குழு உறுப்பினர் T. குணா செய்தியாளர்களிடம் கூறியதாவது :- 

கடந்த 2003-ம் ஆண்டு வரை ரயில் நிலைய வளாகத்திற்குள் ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டிருந்தன . ஆனால், புனரமைப்பு பணி நடைபெற்று முடியும் வரை ஆட்டோக்களை ரயில் நிலைய முகப்பு பகுதியில் நிறுத்தும் படி அறிவுறுத்தப்பட்டது. 

ஆனால், புனரமைப்பு பணிகள் முடிந்த பின்னர் கார்பரேட் டாக்சிகளுக்கு அந்த இடம் ஒதுக்கப்பட்டது. 

இந்த நிலையில் ஆட்டோக்கள் நிறுத்தப்பட ரயில் நிலைய முகப்பில் ஊட்டி மலை ரயில் எஞ்சின் நிறுவப்பட்டது. இதை தொடர்ந்து ஆட்டோக்களை அப்பகுதியிலும் நிறுத்தக்கூடாது என்று கூறி வரும் ரயில்வே நிர்வாகம் போலீசாரை கொண்டு ஆட்டோக்களை அப்புறப்படுத்தும் பணியில் இறங்கியுள்ளது. 

ஏற்கனவே ரயில் நிலையத்திற்குள் ஆட்டோக்களை நிறுத்துவதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் சூழலில் போலீசார் ஆட்டோக்களை அப்புறப்படுத்த கூடாது என்றும், அவ்வாறு செய்தால் இத்தொழிலை நம்பியுள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் 40 பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் மாநகர காவல்துறை ஆணையரிடம் மனு அளித்துள்ளோம். 

இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...