3-ம் ஆண்டு ” டேஸ்ட் ஆப் கோயம்புத்தூர்” உணவுத் திருவிழா வரும் 5-ம் தேதி தொடக்கம்

வ.உ.சி மைதானத்தில் 5-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை நடக்கும் இந்த விழாவில், அனைத்து முன்னணி ஓட்டல்கள், ரெஸ்ட்டரெண்ட்கள் ஒரே இடத்தில் சங்கமிக்க உள்ளன. சைவம், அசைவம், இனிப்பு, ஐஸ் க்ரீம்கள், கேக்குகள், பழரசங்கள் என பலவகையான உணவுகளை ருசிக்கலாம். என இன்று நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

கோவை, ஜனவரி 02

கோவை மாவட்ட ஓட்டல் கூட்டமைப்பு சார்பில் 3-ம் ஆண்டு ” டேஸ்ட் ஆப் கோயம்புத்தூர்” என்ற உணவுத்திருவிழா வரும் 5-ம் தேதி தொடங்குகிறது. 



வ.உ.சி மைதானத்தில் 5-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை நடக்கும் இந்த விழாவில், அனைத்து முன்னணி ஓட்டல்கள், ரெஸ்ட்டரெண்ட்கள் ஒரே இடத்தில் சங்கமிக்க உள்ளன. சைவம், அசைவம், இனிப்பு, ஐஸ் க்ரீம்கள், கேக்குகள், பழரசங்கள் என பலவகையான உணவுகளை ருசிக்கலாம். என இன்று நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். 

மில்கி மிஸ்ட் தயாரிப்புகள் சார்பில் நடக்கும் இந்த விழாவில், 140 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. அதில், 30 முதல் 40 அரங்குகள் அசைவத்திற்கும், 20 முதல் 25 சைவ அரங்குகளும், 10 முதல் 20 வரை ஐஸ் க்ரீம்கள், கேக்குகள், பழரசங்கள் உள்ளிட்டவைகளுக்கு அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. இந்த உணவுத் திருவிழாவில் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலான பொதுமக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த விழாவில் பங்கேற்பதற்கு, நபருக்கு ரூ.150 கட்டணம் வசூலிக்கப்படும். அதில், ரூ.50 நுழைவுக்கட்டணம் தவிர்த்து எஞ்சிய ரூ. 100-க்கு தேவையான உணவுகளை சாப்பிட்டு மகிழலாம். 

வரும் 5-ம் தேதி மாலை 04.30 மணிக்கு தொடங்கும் இந்த உணவுத் திருவிழாவை, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரன், மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன், காவல் ஆணையர் பெரியய்யா, எம்எல்ஏக்கள் அருண்குமார், அம்மன் அர்ஜீன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

தொடக்க நாளில், ஆளப்போறா தமிழன் பாடல் புகழ் திரைப்பட பின்னணி பாடகர் சத்ய பிரகாஷ் குழுவினரின் இசைநிகழ்ச்சி நடைபெறுகிறது. 6-ம் தேதியன்று விஜய் டிவி சூப்பர் சிங்கர் ப்ரியா, நிக்கில் மேத்யூ குழுவினரின் இசைநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட உள்ளது. அதே நாளில், சின்னத்திரை சமையற்கலைஞரும், நடிகையுமான அனுராதா கிருஷ்ணடுமுர்த்தியின் சமையல் நிகழ்ச்சியும் நடக்கிறது. 7-ம் தேதி இயற்கை உணவு மருத்துவர் ஆறாம்திணை சிவராமனின் உணவுக் கருத்தரங்கும், ஜக்ளர் இட்டைச் சகோதரர்களின் ஜக்ளிங் நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சிகளை ஜீ தொலைக்காட்சி புகழ் அர்ச்சனா தொகுத்து வழங்குகிறார். 

இந்த நிகழ்ச்சிக்கு வருபவர்களை மகிழ்விக்கும் விதமாக திண்டுக்கல் சக்திபோர் பறையின் சார்பில் தப்பாட்டம், ஒயிலாட்டம் ஆகியன நடைபெற இருக்கிறது. மேலும், பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளும், மருத்துவ வசதிகளும் செய்யப்பட உள்ளது. 3 நாட்கள் நடக்கும் இந்த உணவுத் திருவிழா, மாலை 05-00 மணி முதல் 11.00 மணி வரை நடக்கிறது. 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...