இந்திய மருத்துவ கவுன்சில் விவகாரம் : போராட்டத்தை வாபஸ் பெற்றனர் மருத்துவர்கள்

இந்திய மருத்துவ கவுன்சிலை கலைக்கும் மத்திய அரசின் மசோதாவை நாடாளுமன்றத் தேர்வுக்குழுவுக்கு அனுப்புவதாக மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர் மருத்துவர்கள்.

கோவை, ஜனவரி 2

இந்திய மருத்துவ கவுன்சிலை கலைக்கும் மத்திய அரசின் மசோதாவை நாடாளுமன்றத் தேர்வுக்குழுவுக்கு அனுப்புவதாக மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர் மருத்துவர்கள்.

இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்து விட்டு தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகின்றது. இது தொடர்பான மசோதாவை மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்துள்ளது.இதற்கு நாடு முழுவதும் மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் வெளிநோயாளிகளுக்கான சிகிச்சையானது காலை 6 மணி முதல் மாலை 6 மணி அவசர சிகிச்சைகள் தவிர மற்ற சிகிச்சைகள் நிறுத்தப்பட்டது.

கோவையில் மட்டும் இன்று 5000க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இந்த அடையாள வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று காலை கோவை அரசு மருத்துவர்கள் ஒரு மணி நேர பணி புறக்கணிப்பு  செய்தனர்.

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்தபடி மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக  ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் , மசோதாவை நாடாளுமன்ற தேர்வுக்குழுவுக்கு அனுப்புவதாக மத்திய அரசு இன்று அறிவித்ததை தொடர்ந்து மருத்துவர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். 

அகில இந்திய மருத்துவ சங்கம் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தது. 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...