ஒரே நாளில் 70 விமானப் போக்குவரத்து சேவைகளை வழங்கிய கோவை விமான நிலையம்

கோவை, ஜனவரி 3

புத்தாண்டு தினத்தையொட்டி, கடந்த டிசம்பர் 31-ம் தேதியன்று ஒரே நாளில் 70 விமானப் போக்குவரத்து சேவைகளை வழங்கி கோவை விமான நிலையம் சாதனை படைத்துள்ளது.

இது தொடர்பாக கோவை விமான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில நாட்களில், ஏ320 மற்றும் பி737 ரக 21 விமானங்களும், ஏடிஆர் ரக 14 விமானங்களும் ஒரே நாளில் தங்களது சேவையை அளித்திருந்தது அதிகபட்சமாகும். இந்த நிலையில், புத்தாண்டு தினத்தையொட்டி, கடந்த டிசம்பர் 31-ம் தேதியன்று ஒரே நாளில் 70 விமானப் போக்குவரத்து சேவைகளை கோவை விமான நிலையம் வழங்கியுள்ளது.

அன்றைய தினம், 12 இண்டிகோ நிறுவன விமானங்களும், 10 ஜெட் ஏர்வேஸ் விமானங்களும், 7 ஏர் இந்தியா விமானங்களும், 3 ஸ்பை விமானங்களும், வெளிநாட்டிற்கு செல்லும் ஏர் அரேபியா, ஸ்ரீலங்கன் மற்றும் சில்க் ஏர்விமானங்களும் தரையிறங்கின. இதில், உள்நாட்டு விமானங்களில் 4,374 பயணிகளும், வெளிநாட்டு விமானங்களில் 510 பயணிகளும் பயணம் செய்துள்ளனர். இதேபோல, 35 விமானங்கள் கோவை விமான நிலையத்தில் இருந்து மற்ற பகுதிகளுக்குப் புறப்பட்டுச் சென்றது.

இதன்மூலம், ஒரே நாளில் 70 விமானப் போக்குவரத்து சேவைகளை வழங்கிய பெருமையை கோவை விமான நிலையம் பெற்றுள்ளது. அன்றைய நாளில் 9,500 பேர் பயணம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக விமான நிலையம் அதிகாரி கூறுகையில், கோவை விமான நிலையம் வரும் காலத்தில் மிகவும் வளர்ச்சியடையும் என நம்புகிறோம். நாட்டில் உள்ள விமான நிறுவனங்களின் கவனத்தை ஈர்க்கும் வாய்ப்பை கோவை விமான நிலையம் உருவாக்கும். இந்த ஆண்டு சிறந்த விமானச் சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...