அடையாள அட்டை உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் பணி புறக்கணிப்பு போராட்டம்

கோவை, ஜனவரி 3

நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யும் போது, வழக்கறிஞர் அடையாள அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இன்று முதல் காலவரையற்ற பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கோவை வழக்கறிஞர்கள் சங்கத்தின் அவசர பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்யும் போது, அதில் ஆஜராகும் வழக்கறிஞரின் அடையாள அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்திரவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மேலும், இந்த உத்திரவினை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் காலவரையற்ற பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவது எனவும் பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, கோவையில் 3000-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள 40-க்கும் மேற்பட்ட நீதிமன்றங்களில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...