அரசியலில் களம்புகும் ரஜினியை யாரும் இயக்கவில்லை' - ஜி.கே. வாசன்

நடிகர் ரஜினியை யாரோ இயக்குவது என்பது தவறான கருத்து, அவருடைய திரைப்படங்களில் இயக்குநர்கள் மட்டுமே அவரை இயக்க முடியுமே தவிர அரசியலில் யாரும் அவரை இயக்க முடியாது என்று திருப்பூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

திருப்பூர், ஜனவரி 03:

நடிகர் ரஜினியை யாரோ இயக்குவது என்பது தவறான கருத்து, அவருடைய திரைப்படங்களில் இயக்குநர்கள் மட்டுமே அவரை இயக்க முடியுமே தவிர அரசியலில் யாரும் அவரை இயக்க முடியாது என்று திருப்பூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

திருப்பூர் மாநகரில் த.மா.க.,வின் மாணவரணி செயலாளர் பிரசாந்த் உள்ளிட்ட மூன்று பேர் கடந்த 2017 டிசம்பர் 31-ஆம் தேதியன்று கோவை மாவட்டம் சூலூர் காவல் சரகத்திற்குட்பட்ட தெண்ணம்பாளையம் அருகே சாலை விபத்தில் பலியாயினர். அவர்களது இல்லத்திற்கு இன்று சென்ற ஜி.கே.வாசன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். 

இதனையடுத்து கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன் பேட்டியளிக்கையில், "ரஜினிகாந்த் அரசியலுக்கு புதியவர் அல்ல. 30 வருடங்களாக நேரிடையாகவும், மறைமுகமாகவும் அரசியலை கவனித்து வருகிறார். அரசியல் ஆழம் தெரிந்தவர். பல தலைவர்களும் அரசியலுக்கு அப்பாற்பட்டு அவரைச் சந்தித்து ஆலோசனை செய்ததுண்டு.

ரஜினியின் முழுநேர அரசியலுக்காக பொறுத்திருக்கிறோம். அவரின் கொள்கை, கோட்பாடுகளை பொறுத்து த.மா.க கூட்டணி முடிவு செய்யும்" என்றார்.

மேலும், தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். ஜிஎஸ்டி வரிவிதிப்பின் காரணமாக திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அதனை முறைப்படுத்தப்பட வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் வார்டுகள் பிரிக்கப்படும் போது ஆய்வு, ஆலோசனை, மக்களுடைய எண்ணங்களை பிரதிபலிக்கும் விதமாக அமைய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...