பொங்கல் பண்டிகையொட்டி சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு

ஜனவரி 03

பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகம் முழுவதும் 11,983 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துறை அமைச்சர்  எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். 

பொங்கல் பண்டிகைக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து சென்னை பல்லவன் இல்லத்தில் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- பொங்கல் பண்டிகைக்கு 11,983 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். 11, 12, 13ம் தேதிகளில் இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இதற்காக முன்பதிவு செய்ய 29 சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்படும். ஜனவரி 9-ம் தேதி முதல் 13ம் தேதி முன்பதிவு மையங்களில் முன்பதிவு செய்யப்படும். இந்த முறை 6 லட்சம் பேர் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பண்டிகை முடிந்து மக்கள் திரும்பி வரச் சென்னைக்கு 3,000 பேருந்துகளும், தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு 10 ஆயிரம் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும். சென்னையில் கோயம்பேடு அல்லாது ஐந்து தற்காலிக பேருந்து நிலையங்கள் செயல்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார். 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...