மேய்ச்சலுக்குச் சென்ற ஆடுகள் டிப்பர் லாரி மோதி விபத்து : 40 ஆடுகள் பலி

கோவை, ஜனவரி 04

கோவை அருகே மண் ஏற்றி வந்த டிப்பர் லாரி மேய்ச்சலுக்குச் சென்ற ஆடுகள் கூட்டத்திற்குள் புகுந்து விபத்துள்ளானதில் 40 ஆடுகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சூலூர் அருகேயுள்ள கலங்கல் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன், ராஜேந்திரன் உள்ளிட்ட 5 பேர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகின்றனர். இன்று 500-க்கும் மேற்பட்ட ஆடுகளை மேய்ச்சலுக்காக பாப்பம்பட்டி பகுதிக்கு, பீடம்பள்ளி வழியாக ஓட்டி சென்றனர். அப்போது, மண்ணை அதிக பாரத்துடன்  ஏற்றிக் கொண்டு அதிவேகமாக வந்த டிப்பர் லாரி ஏதிரே வந்துள்ளது. சாலையில் ஆடுகளைப் பார்த்ததும் லாரி ஒட்டுநர் வண்டியை நிறுத்த முற்பட்டுள்ளார். ஆனால், கட்டுப்பாட்டை இழந்த லாரி ஆடுகள் கூட்டத்திற்குள் நுழைந்து விபத்துள்ளானது. இதில், 40 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. மேலும் 23 ஆடுகள் படுகாயமடைந்தன. 

இறந்த ஆடுகளின் மதிப்பு சுமார் ரூ. 6 இலட்சம் வரை இருக்குமென உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து சூலூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...