கோவையில் பேருந்துகள் சீராக இயக்கப்படுகிறதா என ஆட்சியர் ஆய்வு

போக்குவரத்து தொழிற்சங்கங்களின் போராட்டத்தால் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ள நிலையில் கோவையில் பேருந்துகள் இயக்கப்படுகின்றனவா என்று மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை, ஜனவரி 05

போக்குவரத்து தொழிற்சங்கங்களின் போராட்டத்தால் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ள நிலையில் கோவையில் பேருந்துகள் இயக்கப்படுகின்றனவா என்று மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

அடிப்படை ஊதியம், தர ஊதியத்துடன் 2.57 சதவிகிதம் ஊதியம் வழங்க வேண்டும் என்று போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கோரிக்கை முன்வைத்தன. முதலில் 2.40 சதவிகிதம் மட்டுமே தர முடியும் என்று அறிவித்த தமிழக அரசு பின்னர் 2.44 சதவிகிதம் மட்டுமே தர முடியும் என்று பேச்சுவார்த்தைக்குப் பின் கூறியது. இதை ஏற்காத தொழிற்சங்கத்தினர் தமிழகம் முழுவதும் நேற்று மாலை முதல் பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் கோவை காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர் உள்ளிட்ட கோவையின் முக்கிய பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கோவை மண்டல தலைமை அலுவலக பணிமனையில் பேருந்துகள் சீராக இயக்கப்படுவதை ஆட்சியர் திரு டி.என். ஹரிஹரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதில், மாநகர காவல் ஆணையர் பெரியய்யா, போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் பாண்டி, பொபது மேலாளர் இ. கோவிந்தராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...