ப்ரோஷோன் மாலில் 3 நாள் நடக்கும் ”அங்காடி-18” மாபெரும் ஷாப்பிங் திருவிழா தொடக்கம்

கோவை, ஜனவரி 05

இளைஞர்களிடையே தொழில் முனையும் ஆர்வத்தையும், திறமைகளையும் மேம்படுத்தும் நோக்கில் கோவை ப்ரோஷோன் மாலில் 3 நாள் நடக்கும் மாபெரும் ஷாப்பிங் திருவிழா தொடங்கியது. 



 

கேசிடி மேலாண்மைத் துறை மாணவர்களால் அனைத்து தொழில் மேலாண்மையியல் மாணவர்களுக்காகவும் நடத்தப்படும் விற்பனைத் திருவிழாவே அங்காடி-18 ஆகும். இது இன்று முதல் 7-ம் தேதி வரையில் ஸ்வாரஸ்யமான முறையில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இது பங்கேற்கும் மாணவர்களின் எண்ணங்களுக்கு உயிரூட்டும் தளமாகவும், சுயதொழில் செய்வதன் சாதக, பாதகங்களின் அனுபவ அறிவைப் பெற்று, அதன் மூலம் வியாபார யுக்திகளால் லாபம் ஈட்டும் களமாகவும் திகழும் என்பதில் சற்றும் ஐயமில்லை.

அங்காடி-18-ஆனது பல்வேறு உணவு வகைகள், சிறுவர்களுக்கான கேளிக்கை நிகழ்வுகள், திறன் கொணர் போட்டிகள், இயற்கை சார்ந்த பொருட்கள், உடைகள், அணி மணிகள், வீடு உபயோக பொருட்கள் மற்றும் அலங்காரப் பொருட்கள் என பலதரப்பட்டவற்றின் விற்பனை நிலையமாக 10,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்களை எதிர்நோக்கி காத்திருக்கிறது. இங்கு வெவ்வேறு பிஸினஸ் பள்ளி (BUSINESS SCHOOL)  மாணவர்கள் பங்கெடுப்பதால், அவர்கள் தங்களது வியாபார யுக்திகளை மேம்படுத்தவும், வெளிப்படுத்தவும் அங்காடி ஒரு மிகச் சிறந்த வாய்ப்பாக அமையும்.

கேசிடி மேலாண்மைத் துறை என்பது குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியின் ஒரு அங்கமாகவும், சமூக அக்கறை கொண்ட தொழில் முனைவோர்களையும், முன்னோடிகளையும் உற்பத்தி செய்யும் மையமாகவும் திகழ்கிறது. இந்நாள்வரை குமரகுரு கல்லூரி வளாகத்திற்குள்ளாகவே நடைபெற்ற அங்காடி நிகழ்வானது, முதன்முறையாக கல்லூரிகளுக்கிடைப்பட்ட நிகழ்வாக, பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் கோவை ப்ரோஷோன் மாலில் நடைபெற உள்ளது. மேலும், வாடிக்கையாளர்களின் வசதிக்காக அங்கேயே பெரிய அளவில் கார் பார்க்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

வெவ்வேறு விதமான 75 விற்பனையகங்கள் மூலம் பங்கெடுக்கும் மாணவர்களுக்கு, தொழில் முனையத் தேவையான திறன்களை ஊட்டி, வியாபார நேர்த்திகளைக் கற்பிப்பதே அங்காடி-18ன் சீரிய நோக்கமாகும்.

இந்த மாபெரும் விற்பனைத் திருவிழாவானது மூன்று நாட்களிலும் காலை 11 மணிக்குத் தொடங்கி, இரவு 10 மணி வரையிலும் நடைபெறும். அனுமதி அனைவருக்கும் இலவசம். இந்நிகழ்வை வருகையாளர்களுக்கு என்றென்றும் பசுமையான நினைவாக்கும் வகையில், அங்காடியானது, கோவை விழா அமைப்போடு கைகோர்த்து செயலாற்ற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...