வரும் 7-ம் தேதி ”சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்” என்ற சிறப்பு கருத்தரங்கம்

கோவை, ஜனவரி 05

சுற்றுச்சூழல், நதிநீர், வனவிலங்கு, பாதுகாப்பு பஞ்சமி நில மீட்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 7ம் தேதி கோவையில் சிறப்பு கருத்தரங்கம் கூட்டமைப்பு சார்பில் நடைபெறுகிறது. 

கோவை மேற்குதொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் தொடர்ந்து ஆக்கிரமிப்பு நடவடிக்கை நடந்து வருகிறது. சமீப காலமாக நகரத்திற்குள்ளேயே வனவிலங்குகள் வழிமாறி வந்து கொண்டிருக்கிறன. மத்திய, மாநில அரசுகளின் ஆசியோடு நடைபெறும் இதுபோன்ற ஆக்கிரமிப்புகளைக் கண்டித்து சிபிஎம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறன. 

இதன் ஒருபகுதியாக கோவை வடவள்ளி மருதமலை அடிவாரத்தில் உள்ள பொதிகை மஹாலில் வரும் 7-ம் தேதி (ஞாயிறன்று) சிறப்பு கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில், இயற்கை பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நதிநீர் பாதுகாப்பு, வனவிலங்கு பாதுகாப்பு, பஞ்சமி நில மீட்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இயற்கை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் இக்கருத்தரங்கம் நடைபெறுகிறது. 

இக்கருத்தரங்கில் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்கள் சுபாஷினி அலி, உ. வாசுகி மற்றும் சூழலியல் ஆர்வலர்கள் கோவை சதாசிவம், பியூஸ்மனுஸ், ஓசை காளிதாஸ் மற்றும் சமூக இயக்கங்களான மலைவாழ் மக்கள் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஆதித்தமிழர் கட்சி, சமூக நீதிக்கட்சி உள்ளிட்ட அமைப்புகளின் மாநில தலைவர்களும் பங்கேற்று உரையாற்ற உள்ளனர். காலை 9 மணிக்கு துவங்கும் இக்கருத்தரங்கம் மதியம் வரை நடைபெற உள்ளது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...