கோவை தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு எ.ஐ.டி.யு.சி.யினர் ஆர்ப்பாட்டம்


கோவை, ஜனவரி 05

தொழிலாளர்கள் பிரச்சனைகளை தமிழக அரசும், தொழிலாளர் நலத்துறையும் அலட்சியப்படுத்துவதாகக் குற்றம்சாட்டிய எ.ஐ.டி.யு.சி.யினர், கோவை தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



தொழிலாளர்கள் நலனுக்காக அமைக்கப்பட்ட தொழிலாளர் நலத்துறை தொழிலாளர்களின் பிரச்சனைகள் தொடர்பாக தீர்வு காணாமல் அலட்சியப் போக்குடன் செயல்படுவதாகவும், தமிழக அரசும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தை ஏ.ஐ.டி.யு.சி.யினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதில், 480 நாட்கள் பணியாற்றும் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும், நலவாரியம் மற்றும் மாநில ஆலோசனை வாரியரங்களில் முத்தரப்பு குழு அமைக்க வேண்டும், வாரிய நிதிபலன் தொகையை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தினர். ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். தமிழக அரசையும், தொழிலாளர் நலத்துறையையும் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...