தினகரனை பார்த்து எம்எல்ஏக்கள் எழுந்து நிற்க வேண்டிய நிலை விரைவில் வரும் : நாஞ்சில் சம்பத்


கோவை, ஜனவரி 05

டிடிவி தினகரனை பார்த்து எழுந்து நிற்க வேண்டிய நிலை அதிமுக எம்.எல்.ஏ களுக்கு விரைவில் வரும் என கோவையில் செய்தியாளர்களை சந்தித்த நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய பெண்கள் பாதுகாப்பு மசோதா எனும் பெயரில் ஷரியத் சட்டத்தில்  மத்திய அரசு கை வைப்பதை கண்டித்து கோவை கோட்டைமேடு வின்செண்ட் சாலையில் கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்ட  ஜமா அத்துல் உலமா சபை சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில்,  டிடிவி தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் பங்கேற்கும் முன்பு அவர் செய்தியாளர்களிடம் பேட்டி அளிக்கையில், 

முத்தலாக் சட்ட மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுக்கு அனுப்ப தொடர்ந்து வலியுறுத்த பட்ட பின்னரும், மத்திய அரசு அனுமதிக்க மறுக்கின்றது.  தினகரன் சட்டமன்றத்தில் வரும் 8 ம் தேதி  நுழையும் போது யாரும் எந்திரிக்க கூடாது என அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், தினகரனை பார்த்து எழுத்து நிற்க வேண்டிய நிலை ஏற்படும்.

ஜெயலலிதாவின் வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லத்தை அரசுடமை ஆக்குவதில் மாற்றுக்கருத்தில்லை.  அதே வேளையில், ரத்த சம்மந்தப்பட்ட வாரிசுகளின் கருத்துகளையும் தமிழக அரசு கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். என்றார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...