வால்பாறையில் அதிகரித்து வரும் காட்டு யானைகள் அட்டகாசம் : ரேசன் கடைகள் உடைப்பு

கோவை, ஜனவரி 05

கோவை மாவட்டம் வால்பாறை அருகே குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானைகள் ரேஷன் கடையை சேதப்படுத்தின. மேலும், கடையினுள் இருந்த ரேஷன் பொருட்களையும் சூறையாடின.



வால்பாறையை அடுத்துள்ள சின்கோனா முதல்பிரிவில் நேற்று நள்ளிரவு புகுந்த 13 காட்டு யானைகள் கொண்ட கூட்டம் ரேசன் கடையை சூறையாடியது. ரேசன் கடையின் ஜன்னல் கதவுகளை உடைத்த காட்டு யானைகள் உள்ளே வைக்கப்பட்டிருந்த அரிசி பருப்பு போன்றவற்றை சேதப்படுத்தியது. அப்பகுதியில் சுதாகர் என்பர் நடத்தி வரும் கடையையும் உடைத்து சேதப்படுத்தியது. இதனால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு வனத்துறையினர் அப்பகுதிக்கு வந்து காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். 

இதே போன்று அதிகாலையில் ஐயர்பாடி ரோப்பமட்டம் பகுதியில் நுழைந்த காட்டு யானைகள் அப்பகுதியில் கோபால் என்பவர் நடத்தி வந்த கடையை சூறையாடி உள்ளே இருந்த பொருட்களை சேதப்படுத்தியது. 

தொடர்ந்து காட்டு யானைகளின் தொந்தரவு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். வனத்துறையினர் தொடர்ந்து குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் காட்டு யானைகளை அருகாமையில் உள்ள வனப்பகுதிக்குள் விரட்டினாலும் அவை அப்பகுதியிலே முகாமிட்டுள்ளது. உபாசி, பன்னிமேடு, பழைய வால்பாறை போன்ற பகுதிகளில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...