வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நோட்டீஸ்

ஜனவரி 06

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, பணிக்கு வராத போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

அரசு போக்குவரத்து கழகங்களில் சுமார் 1.5 லட்சம் ஊழியர்கள்  பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும், ஓய்வூதிய நிலுவை தொகைகளை தர வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தில் குதித்துள்ளனர். அரசு பேருந்து ஊழியர்கள் தங்களது சம்பள உயர்வு 2.57 மடங்காக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். ஆனால், அரசு தரப்பில் 2.44 மடங்கு ஊதியம் தர சம்மதிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் நேற்று முன் தினம் முதல் பேருந்துகளை இயக்கவில்லை.

தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களாக சுமார் 90 சதவீத பேருந்துகள் ஓடவில்லை. இதனால், லட்சக்கணக்கான பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். இந்த நிலையில், அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் பேருந்து வேலைநிறுத்தம் இன்று 3-வது நாளாக நீடித்தது.

இதனால், பொதுமக்கள் தங்களது அன்றாட பணி நிமித்தமாக வெளியில் செல்வது கடுமையாகப் பாதிக்கப்பட்டது. நீண்ட தூர பேருந்துகள் செல்லாததால் சனி, ஞாயிறு விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்குச் செல்பவர்கள் மிகவும் அவதிக்குள்ளானார்கள். 

இந்த நிலையில் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தடை விதித்தும், ஓட்டுநர்கள், நடத்துநர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பணிக்குத் திரும்பாதவர்கள் மீது பணி நீக்கம், நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்தது.

இதையடுத்து, தமிழக அரசும், போக்குவரத்து தொழிலாளர்களை பணிக்குத் திரும்பும்படி கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால், அரசு மற்றும் நீதிமன்றத்தின் கோரிக்கைகளை ஏற்க அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் மறுத்துவிட்டன.

பணிக்கு வராத தொழிலாளர்களுக்கு போக்குவரத்துத்துறை நோட்டீஸ் அனுப்பியது. உயர்நீதிமன்ற உத்தரவின்படி, பணிக்கு வராத தொழிலாளர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நாளைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் எனத் தொழிலாளர்களுக்கு போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...