தேசிய அளவில் சிறந்த காவல் நிலையமாக ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் தேர்வு

தேசிய அளவில் சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்ட கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் விருது வழங்கினார்.


கோவை, ஜனவரி 6

தேசிய அளவில் சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்ட  கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் விருது வழங்கினார்.

குற்றத்தடுப்பு, கொள்ளை போன பொருட்கள் மீட்கப்படுதல், சுகாதாரம் மற்றும் மழை நீர் சேகரிப்பு ஆகியவற்றை சிறப்பாக மேலாண்மை செய்யும் காவல் நிலையங்களுக்கு விருது வழங்க இருப்பதாக உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.  இந்த விருதுக்காக இந்தியாவில் சிறப்பாக செயல்படும் காவல் நிலையங்களை காவல்துறை வளர்ச்சி மையம்  பட்டியலிட்டது.

இதற்காக தமிழக அரசின் சார்பில்  கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தின் பெயரும் பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி, மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள எல்லைப்பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் சிறந்த காவல் நிலையங்களுக்கான விருது இன்று வழங்கப்பட்டது.

அதில், முதல் பரிசை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் பெற்றுள்ளது. இந்த விருதினை அக்காவல்நிலைய ஆய்வாளருக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வழங்கி கவுரவித்தார். 2-ம் இடத்தை தெலுங்கானா மாநிலம் பஞ்சகுட்டா காவல்நிலையமும், 3-வது இடத்தை உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள குடும்பா காவல்நிலையமும் பிடித்தது. 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...