மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை வைக்க எதிர்ப்பு: கிருஷ்ணசாமியை கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம்

மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரை வைக்க எதிர்ப்பு தெரிவித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியை கண்டித்து தேவர் முன்னணியினர் கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை, ஜனவரி 7

மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரை வைக்க எதிர்ப்பு தெரிவித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியை கண்டித்து தேவர் முன்னணியினர் கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத்தின் பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை 25 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தலைவர்களின் பெயரை மத்திய, மாநில அரசு வளாகங்களுக்கு சூட்டக்கூடாது என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்த எதிர்ப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தேவர் முன்னணியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் இன்று கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இது குறித்து தேவர் முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் நரசிங்க மூர்த்தி கூறுகையில், 'கிருஷ்ணசாமி சாதி வேற்றுமை உணர்வுகளைத் தூண்டி வருகிறார். மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன்னாரின் பெயரை வைக்க எதிர்ப்பு தெரிவித்திருப்பது கண்டனத்திற்குரியது' என்றார்.

முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கிருஷ்ணசாமியை எதிர்த்து கோஷங்கள் எழுப்பிய தேவர் முன்னணியினர் அவரது உருவப்படத்தை கிழித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...