கோவையில் தற்காலிக ஓட்டுனரால் விபத்து: அரசுப்பேருந்து மோதியதில் முதியவர் படுகாயம்

கோவையில் தற்காலிக ஓட்டுனர் இயக்கிய அரசுப் பேருந்து மோதிய விபத்தில் முதியவர் படுகாயமடைந்துள்ளார்.

ஊதிய உயர்வு, அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், ஓய்வூதியதாரர்கள் பென்ஷன் நிலுவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

90 சதவிகித ஓட்டுனர்கள் வேலைக்கு வராத காரணத்தால் அரசு பேருந்து சேவை முடங்கியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு திரும்பும் வரை தற்காலிக ஓட்டுனர்களை கொண்டு பேருந்துகளை இயக்க அரசு முடிவு செய்தது. அதன்படி, தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் தற்காலிக ஓட்டுனர்கள் பேருந்துகளை இயக்கி வருகின்றனர்.

அதன்படி, கோவை மருதமலை பகுதியை சேர்ந்த இமய பாரதி என்ற தற்காலிக ஓட்டுனர் 76 இலக்கமிட்ட பேருந்தை இயக்கினர்.



காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து மருதமலை நோக்கிச் சென்ற அந்த பேருந்து சாலையில் நடந்து சென்ற முதியவர் ஒருவர் மீது மோதியது. இந்த விபத்தில், அந்த முதியவர் படுகாயமடைந்தார்.
இது தொடர்பாக வடவள்ளி காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதே போல், சென்னையில் தற்காலிக ஓட்டுனர் இயக்கிய பேருந்து மோதி வாலிபர் ஒருவர் பலியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...