சாட்சிகளுக்கு நீதிமன்ற அழைப்பாணை தகவல் அனுப்புவதற்கு புதிய சேவை துவக்கம்


கோவை, ஜனவரி 8

நீதிமன்றங்களில் சாட்சி அளிக்கும் நபர்களுக்கு அழைப்பாணை தகவல் அனுப்பும் வகையில் தமிழ்நாடு காவல் துறையின் சார்பில் குறுஞ்செய்தி சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டமானது தேசிய மின்னாளுமைத் திட்டத்தின் கீழ் "குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் வலை பின்னல் அமைப்பு" தமிழ்நாடு காவல்துறையில் உள்ள முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் சிறப்பு பிரிவுகளில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், பொதுமக்கள் சேவையை மேம்படுத்தும் வகையில் http://eservices.tnpolice.gov.in எனும் இணையதளத்தின் மூலமாக இணைய வழி சேவையும் வழங்கப்பட உள்ளது.

இதன் மூலம், புகார் பதிவு, முதல் தகவல் அறிக்கை பார்க்க மற்றும் பதிவிறக்கம் செய்யும் வசதி, வாகனங்களின் விபரம் தேடல், காணாமல் போனவர்கள் மற்றும் அடையாளம் தெரியாத இறந்துபோன நபர்களின் விபரங்கள் பற்றிய தகவல், சாலை வாகன விபத்து தொடர்பான ஆவணங்கள் பதிவிறக்கம் உள்ளிட்டவற்றை பதியலாம்.

மேற்கண்ட இணையதள சேவைகளை பொதுமக்கள் நேரடியாக காவல்துறை இணையதளத்திலும் மற்றும் Google Play Store-யில் செயலியை பதிவிறக்கம் செய்தும் பயனடையலாம்.

குறுஞ்செய்தி மூலம் சாட்சிகளுக்கு நீதிமன்ற அழைப்பாணை:-

தற்பொழுது, சாட்சிகளுக்கு நீதிமன்ற அழைப்பாணை குறித்த தகவல்களை குறுஞ்செய்தி மூலமாக அனுப்பும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதியை தமிழக முதலமைச்சர் கடந்த ஜனவரி 4ம் தேதியன்று துவக்கி வைத்தார்.

இந்த குறுஞ்செய்தியில் காவல்நிலையத்தின் பெயர், வழக்கு எண், எந்த நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும், தேதி மற்றும் நேரம், மேலும் தகவல் அறிய காவல்நிலைய தொலைபேசி எண் ஆகிய விபரங்கள் அனுப்பிவைக்கப்படும். குறிப்பாக, சாட்சிகளுக்கு வசதியாக தமிழில் குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது.

குறுஞ்செய்தி மூலம் நீதிமன்ற அழைப்பாணை தகவல் அனுப்பும் வசதி இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழக காவல்துறையால் அறிமுகம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...