கந்து வட்டி கேட்டு சிறுவனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு

கோவையில் கந்து வட்டி கேட்டு சிறுவனைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பெண் ஒருவர் குடும்பத்துடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.

கோவை, ஜனவரி 8

கோவையில் கந்து வட்டி கேட்டு சிறுவனைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பெண் ஒருவர் குடும்பத்துடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.

கோவை மாவட்டம், அன்னூர் அருகேயுள்ள கெம்பநாய்க்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி. இவரது மனைவி விஜயலட்சுமி. இத்தம்பதியினருக்கு கீர்த்தனா மற்றும் ஹரிஹரன் என்ற இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இன்று விஜயலட்சுமி தனது குடும்பத்தினருடன் வந்து ஆட்சியரிடம் மனு அளித்தார்.



அம்மனுவில், 6 வருடத்திற்கு முன்னர் தனது கணவர் மருத்துவ சிகிச்சைக்காக தனியார் வாகன உரிமையாளர் மணிகண்டன் என்பவரிடம் 50 ஆயிரம் ரூபாய் பணம் வட்டிக்கு வாங்கினேன். அதனை திரும்ப செலுத்திய போதும் மேலும் 60 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டுமென நிர்ப்பந்தித்து வருகிறார். மேலும், பணம் கேட்டு மிரட்டி வரும் மணிகண்டன் குடும்பத்தினர், தனது மகன் ஹரிஹரன் மீது தாக்குதல் நடத்தினார். இதுகுறித்து அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இருப்பினும், காவல் துறையினர் மணிகண்டனுக்கு ஆதரவாகச் செயல்படுகின்றனர். 

எனவே, அதிக கந்து வட்டி கேட்டு மிரட்டும் மண்கண்டன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...