நஞ்சப்பா சலையில் மீண்டும் சாலை ஓர கடைகள் அமைக்க நடைபாதை வியாபாரிகள் கோரிக்கை

நஞ்சப்பா சலையில் மீண்டும் சாலை ஓர கடைகளை அமைக்க அனுமதி வழங்கக் கோரி நடைபாதை வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை, ஜனவரி 8

நஞ்சப்பா சலையில் மீண்டும் சாலை ஓர கடைகளை அமைக்க அனுமதி வழங்கக் கோரி நடைபாதை வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



இதுகுறித்து கோவை மாநகர நடைபாதை நிறு வியாபாரிகள் சங்கத்தினர் கூறுகையில், கோவை நஞ்சப்பா சலையில் நடைபாதையில் வியாபாரம் செய்து வந்த சிறு வியாபாரிகளை மேம்பாலம் அமைக்கும் பணியின்போது அப்புறப்படுத்தினர். தொடர்ந்து, சிவானந்தா காலனி மின்வாரிய அலுவலகம் அருகே மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், கடைகள் அமைக்க முற்பட்டபோது மின்வாரிய அலுவலக அதிகாரிகளும், காவல் துறையினரும் எங்களை கடை வைக்க அனுமதிக்கவில்லை.

மேலும், கடந்த 10 மாதங்களாக வியாபாரம் செய்ய முடியாத காரணத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் கல்விச் செலவைக் கூட செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேம்பால பணிகள் நிறைவுற்ற நிலையில் தங்களுக்கு போக்குவரத்து இடையூறின்றி கடை வைத்து பிழைத்துக் கொள்ள வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...