வீட்டு மனை வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

வின்சென்ட் ரோடு அடுக்குமாடி குடியிருப்பின் அருகே வசித்தவர்களுக்கும் வீட்டுமனை வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளிக்கப்பட்டது.

கோவை, ஜனவரி 8

வின்சென்ட் ரோடு அடுக்குமாடி குடியிருப்பின் அருகே வசித்தவர்களுக்கும் வீட்டுமனை வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளிக்கப்பட்டது.



கோவை, வின்சென்ட் ரோடு பகுதியில் அமைந்திருந்த அடுக்குமாடி குடியிருப்பு கடந்த 2007-ம் ஆண்டு இடிந்து விழுந்து 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு 356 வீடுகளில் வசித்து வந்தவர்கள் காலி செய்யப்பட்டு மீதம் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை மாநகராட்சி நிர்வாகம் இடித்தது.



இந்நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு புது குடியிருப்புகள் கட்டப்பட்டு அங்கு வசித்து வந்தவர்களுக்கு ஒப்படைக்கப்பட்டது. இடிக்கப்பட்ட கட்டிடங்களுக்கு அருகில் வசித்தவர்களுக்கும் வீடு வழங்கப்படும் என உறுதி அளித்ததின் பேரிலேயே 192 குடும்பங்கள் வீடுகளை காலி செய்து கொடுத்ததாகக் கூறி சோஷியல் டெமோகிரட்டிக் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பு சார்பில் அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.

அதில், வீடு இல்லாதவர்களுக்கு தமிழக அரசு இலவச வீடுகள் அளித்து வரும் நிலையில் தங்களுக்கு உக்கடம் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே கட்டப்பட்டுள்ள வீடுகளில் இடம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...