கொடிநாளையொட்டி ராணுவ வீரர்களுக்கு 25,000 பேனாக்களை வழங்கிய ஜிஎம் பென்ஸ் நிறுவனம்

கொடிநாளையொட்டி ராணுவ வீரர்களை கவுரவிக்கும் விதமாக ராணுவ அமைச்சரிடம் 25,000 பேனாக்களை ஜி.எம் பென்ஸ் இன்டர்நேஷனல் வழங்கியது


கோவை, ஜனவரி 08

கொடிநாளையொட்டி ராணுவ வீரர்களை கவுரவிக்கும் விதமாக ராணுவ அமைச்சரிடம் 25,000 பேனாக்களை ஜி.எம் பென்ஸ் இன்டர்நேஷனல் வழங்கியது

நாடு முழுவதும் 1949-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் டிசம்பர் 7-ம் தேதி தியாகிகள் மற்றும் ராணுவ வீரர்களை கவுரவிக்கும் விதமாக கொடிநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தையொட்டி, நன்கொடைகள் பெறப்பட்டு, அதன்மூலம் முன்னாள் ராணுவ வீரர்கள், ஊனமுற்ற வீரர்கள், பணியின் போது வீரமரணம் அடைந்த வீரர்களின் மனைவிகள், தியாகிகளின் வாரிசுகளுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த கொடிநாளையொட்டி நன்கொடை பெறுவதை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஊக்குவித்து வருகிறார்.

தற்போது, தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அவர், ஜி.எம் பென்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் 30-ம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது, ராணுவ வீரர்களை கவுரவிக்கும் விதமாக ராணுவ அமைச்சரிடம் 25,000 பேனாக்களை ஜி.எம் பென்ஸ் இன்டர்நேஷனல் வழங்கியது. இதற்கான, காசோலையை, ஜி.எம் பென்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் இந்திரக்குமார் மகேந்திரன், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அளித்தார். 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...