கோவையில் குண்டர்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் 6 வாலிபர்கள் கைது

தொடர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட வந்த கோவையைச் சேர்ந்த 6 வாலிபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை, ஜனவரி 08

தொடர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட வந்த கோவையைச் சேர்ந்த 6 வாலிபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சையது அகமது. இவரையும், இவரின் வகுப்பு தோழர்களான சர்ஜூன், அபிலாஷ், நிஷாஸ் மற்றும் அருண் பாண்டியன் ஆகிய 5 பேரையும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 18-ம் தேதி ஒரு கும்பல் கடத்திச் சென்று, ஆள் ஒன்றிற்கு ரூ.50 ஆயிரம் கேட்டு தாக்குதல் நடத்தியது.  அவர்களிடம் பணம் இல்லாததால், செல்போன் மற்றும் இருசக்கர வாகனங்களை பறித்துக்கொண்டு விரட்டிய அந்த கும்பல் தலைமறைவாகியது. 

இது தொடர்பாக, உக்கடம் காவல்நிலையத்தில் சையது அகமது புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், முஜிபர் ரகுமான், ரியாசுதீன், பங்கடி பரூக், சையது இப்ராகிம், மணிகண்டன் மற்றும்  பவுருதீன் ஆகிய 6 வாலிபர்கள் இந்தக் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை போலீஸார் கைது செய்தனர். பின்னர், அந்த 6 பேரிடம் விசாரணை நடத்தியதில் கோவையில் பல்வேறு குற்றசம்பவங்களில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. 

இவர்கள் ஆறு பேரும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், ஆட்கடத்தல், பணம் பறிப்பு போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...