ஈஷா யோகா மையத்தில் 40 ரஷ்யர்கள் யோகா பயிற்சி

கோவை, ஜனவரி 08

ஈஷா யோகா மையத்தில் பயிற்சி பெறுவதற்காக ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 40 பேர் தமிழகம் வந்துள்ளனர். 



யோகா பயிற்சி கற்கும் ஆர்வம் கொண்டு 40 ரஷ்யர்கள் ஈஷா யோகா மையத்தில் வாரந்தோறும் நடைபெறும் அடிப்படை யோகா வகுப்பான இன்னர் இன்ஜினியரிங் வகுப்பில் கலந்து கொண்டு யோகா பயிற்சி பெற்றனர். ஜனவரி 4-ம் தேதி முதல் ஜனவரி 7-ம் தேதி வரை நடைபெற்ற இவ்வகுப்பில் உபயோகா பயிற்சி மற்றும் சாம்பவி மகாமுத்ரா தியானம் ஆகியவற்றை கற்றுக் கொண்டனர். இவர்களில் 20-க்கும் மேற்பட்டோர் ஈஷா யோகா மையத்தில் ஜனவரி 9 மற்றும் 10-ம் தேதி நடைபெற உள்ள சூர்ய க்ரியா பயிற்சி கற்றுக்கொள்ளவிருக்கின்றனர்.

இவர்களில் பலர் ஆங்கில மொழி புலமை இல்லாதவர்கள். மேலும் சிலர் இதுவே முதன் முறையாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்பவர்கள். யோகா கற்றுக்கொள்ளும் ஆர்வத்தில் இவர்கள் தமிழகம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சத்குரு, ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் இந்திய தூதரக வளாகத்தில் சத்சங்கம் நிகழ்த்தினார். இதில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

4 நாள் யோகா வகுப்பில் கலந்து கொண்ட நடாஷா என்பவர் இப்பயிற்சி பற்றி கூறுகையில், " நான் ஒரு மொழி பெயர்ப்பாளராக பணியாற்றுகிறேன்.  நான் உலகின் பல இடங்களுக்குப் பயணித்திருக்கிறேன். பல ஆஷ்ரமங்களுக்கு சென்றுள்ளேன். யோகா பயிற்சிகள் கற்றுள்ளேன். ஆனால், ஈஷாவில் கற்றுக்கொண்ட பயிற்சி கற்றுக்கொள்ள சுலபமாகவும் மிகுந்த பலனளிப்பதாகவும் உள்ளது" என்றார்.

யோகா ஆசிரியர்களில் ஒருவரான யூரிகுஸ்மின் கூறுகையில், ஈஷாவில் ரஷ்ய மொழியில் யோகா நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது என்று அறிவித்தவுடனேயே நிகழ்ச்சிக்கு முன்பதிவு செய்ய துவங்கிவிட்டனர். ரஷ்யா, உக்ரைன், கசக்ஸ்தான் மற்றும் உக்ரைனிலிருந்து ரஷ்யமொழி பேசுபவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பயிற்சியில் ஈடுபட்டனர். மேலும், பயிற்சிகள் கற்றுக்கொள்ள ஆர்வம் தெரிவித்துள்ளனர். எனக் கூறினார். 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...