கொடுத்த கடனை திருப்பிக் கேட்டதற்காக சகோதரி மகளைக் கொலை செய்த சகோதரன்!

சிங்காநல்லூர் பகுதியில் கொடுத்த கடனைத் திருப்பி கேட்ட சகோதரி மற்றும் அவரது மகளுக்கு விஷத்தைக் கொடுத்துவிட்டு சகோதரன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை, ஜனவரி 9

சிங்காநல்லூர் பகுதியில் கொடுத்த கடனைத் திருப்பி கேட்ட சகோதரி மற்றும் அவரது மகளுக்கு விஷத்தைக் கொடுத்துவிட்டு சகோதரன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், சிங்காநல்லூர் அடுத்த நீலிக்கோணாம் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (54). இவரது சகோதரி பாக்கியம் (74). பாக்கியத்தின் மகள் சாந்தி. மணிகண்டன் தனது சகோதரி பாக்கியத்துடன் வசித்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ரியல் எஸ்டேட் தொழில் நடத்த பாக்கியத்திடம் மணிகண்டன் 4 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். இந்நிலையில் கொடுத்த பணத்தை பாக்கியம் தனது சகோதரனிடம் கேட்டுள்ளார். தொழில் நஷ்டம் காரணமாக பணம் தர முடியாத சூழலில் நேற்று (திங்களன்று) இரவு மணிகண்டன் தேனில் விஷம் கலந்து பாக்கியம், அவரது மகள் சாந்தி ஆகியோருக்கு கொடுத்துவிட்டு தானும் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதில், அவரும், சாந்தியும் உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள பாக்கியத்திற்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொழில் நஷ்டம் காரணமாக தனது சகோதரி மகளை விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...