மதுக்கடையில் சில்லரை தராததால் மின்சார கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற இளைஞர்

மதுபானக் கடையில் 2 ஆயிரம் ரூபாய்க்கு சில்லறை தராததால் உயரமான மின்சார கோபுரத்தில் ஏறி இளைஞர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பொதுமக்களிடையே ஒருவித எரிச்சலை தூண்டியுள்ளது.

திருப்பூர், ஜனவரி 9

மதுபானக் கடையில் 2 ஆயிரம் ரூபாய்க்கு சில்லறை தராததால் உயரமான மின்சார கோபுரத்தில் ஏறி இளைஞர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பொதுமக்களிடையே ஒருவித எரிச்சலை தூண்டியுள்ளது.

திருப்பூர் அருகே பெருமாநல்லூர் ரோடு அண்ணா நகர் பகுதியில் உயர் அழுத்த மின்சாரக் கோபுரத்தில் இளைஞர் ஒருவர் குடிபோதையில் மேலே ஏறி கழுத்தில் கயிறு மாட்டிக் கொண்டு கீழே குதித்து விடுவதாக மிரட்டினார். இதுகுறித்து தகவலறிந்த வடக்கு காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 4 மணி நேரம் போராடி அவரை மேலேயிருந்து கீழே இறக்கி விட்டனர்.

இதனைத்தொடர்ந்து, அவரை விசாரித்ததில், கர்நாடக மாநிலம் கொள்ளேகால் பகுதியை சேர்ந்த செல்வராஜ் (25) என்பதும், இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளதும் தெரியவந்தது. மேலும், இவர் குடும்பத்தை விட்டு அவருடைய அக்கா வீட்டில் தனியாக வசித்து வருகிறார். 

இந்நிலையில், மதுபானக் கடையில் 2000 ரூபாய்க்கு சில்லரை தராததால் மனம் உடைந்து குடிபோதையில் தற்கொலைக்கு முயன்றதாக அவர் கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, அவரை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...