ஜெயலலிதா மரணம் விவகாரம்: விசாரணை ஆணையத்தில் உதவியாளர் பூங்குன்றன் ஆஜர்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன்பு, உதவியாளர் பூங்குன்றன் ஆஜரானார்.

ஜனவரி 9

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன்பு, உதவியாளர் பூங்குன்றன் ஆஜரானார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதாவின் உறவினர்கள், அரசு மருத்துவர்கள், முன்னாள் தலைமைச் செயலர்கள் ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவின் உறவினரும், மருத்துவருமான சிவகுமார், உதவியாளர் பூங்குன்றன், தனி பாதுகாவல் அதிகாரி பெருமாள்சாமி ஆகியோருக்கு விசாரணை ஆணையம் கடந்த வாரம் அழைப்பாணை அனுப்பியிருந்தது.

ஜெயலலிதா கிசிச்சை தொடர்பான ஆதாரங்களைச் சமர்ப்பிக்குமாறு சசிகலா, சட்டப்பேரவை உறுப்பினர் டிடிவி தினகரன், அவரது ஆதரவாளர் வெற்றிவேல், அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் தலைவர் பிரதாப் ரெட்டி, அவரது மகளும், அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் துணைத் தலைவருமான பிரீத்தா ரெட்டி ஆகியோருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் 5 விடியோக்களை ஆணையத்திடம் தினகரனும், வெற்றிவேலும் சமர்ப்பித்துள்ளனர்.

ஜெயலலிதாவுக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் சிவக்குமார் நேற்று ஆஜரான நிலையில், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் இன்று ஆஜரானார். ஏற்கனவே, ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் தோட்ட இல்லத்தில் வேலை பார்த்து வந்த 12 பேர்களின் முழு விவரத்தையும் விசாரணை ஆணையத்தில் பூங்குன்றன் வழங்கியிருந்தார். மேலும் சில தகவல்களை விசாரணை ஆணையம் கேட்டிருந்த நிலையில், ஜெயலலிதாவின் உதவியாளராக பல ஆண்டுகள் பணியாற்றி வந்த பூங்குன்றன், விசாரணை ஆணையம் முன்பு இன்று நேரில் ஆஜரானார்.

ஜெயலலிதாவுக்கு நீண்ட காலமாக தனி பாதுகாவல் அதிகாரியாக இருந்த பெருமாள்சாமியை நாளையும், முன்னாள் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணனை நாளை மறுநாளும், இதய நோய் சிகிச்சை மருத்துவர் சாமிநாதன் 12-ஆம் தேதியும் ஆஜராக உள்ளனர். அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் சத்யபாமாவுக்கு அண்மையில் அழைப்பாணை அனுப்பப்பட்டது. இதையடுத்து, அவர் கடந்த வாரம் ஆஜரானார். அவரிடம் காலை 10.30 மணி முதல் 1 மணி வரை விசாரணை நடைபெற்றது. அவரிடம் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை, மருத்துவர்களின் விவரங்கள் குறித்துக் கேட்கப்பட்டன.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...