கோவை விழாவையொட்டி, தொல்லியல் துறை அருங்காட்சியகத்தை கண்டு ரசித்த மாணவர்கள்

”கோவை விழா 2018” - ன் ஒரு பகுதியாக தொல்லியல் துறை அருங்காட்சியகத்தை அரசுக் கல்லூரி மாணவர்கள் சுற்றி பார்த்தனர்.

கோவை ஜனவரி 9

”கோவை விழா 2018” - ன் ஒரு பகுதியாக தொல்லியல் துறை அருங்காட்சியகத்தை அரசுக் கல்லூரி மாணவர்கள் சுற்றி பார்த்தனர்.



கோவையின் சிறப்புகளை எடுத்துரைக்கும் வகையில் 'கோவை விழா 2018' ஜனவரி மாதம் 5-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக வாணவராயர் பவுண்டெசன் சார்பாக கோவை அரசு கல்லூரி, தமிழ் முதுகலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கோவை இராமநாதபுரத்தில் உள்ள இந்திய தொல்லியல் அருட்காட்சியகம் சுற்றி காண்பிக்கப்பட்டது.



இது குறித்து வாணவராயர் பவுண்டெசன் பொறுப்பாளர் ஜெகதீசன் கூறுகையில், "மாணவர்களுக்கு பண்டைய காலம், காலச்சாரம், நாகரிகம், பழக்க வழக்கங்கள் போன்றவை தெரியப்படுத்தவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டது" என்றார்.

இந்தத் தொல்லியல்துறை அருங்காட்சியத்தில் சுமார் 2,000 ஆண்டு பழமையான பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கோவை மாவட்டத்தைச் சார்ந்த பொருட்களாகும் என தொல்லியில் துறை அலுவலர் எஸ். நந்தகுமார் தெரிவித்தார்.



அருங்காட்சியகத்தைச் சுற்றி பார்த்த மாணவர்கள் பழங்கால பொருட்கள் குறித்த குறிப்புகளை எடுத்துக்கொண்டனர். மேலும், அவர்கள் கூறுகையில் இந்த ஏற்பாடு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது, நிறைய விஷயங்கள் கற்றுகொள்ள முடிந்தது என்றனர்.



Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...