கடைசி மீனவர் கரை திரும்பும் வரை மீட்புப் பணி தொடரும்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு

கடைசி மீனவர் கரை திரும்பும் வரை மீட்புப் பணி தொடரும் என ஒகி புயல் குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

ஜனவரி 9

கடைசி மீனவர் கரை திரும்பும் வரை மீட்புப் பணி தொடரும் என ஒகி புயல் குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

ஒகி புயல் குறித்து தமிழக சட்டப் பேரவையில் இன்று கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் எம்எல்ஏ பிரின்ஸ் உள்ளிட்டோரின் கேள்விகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை புயல் சின்னமாக மாறியதும், வருவாய் நிர்வாக ஆணையர், மாவட்ட ஆட்சியர்கள் மூலம் மீனவர்களுக்குத் தகவல் தரப்பட்டது. 

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநரால், தொலைப்பேசி வாயிலாக முக்கியத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. நவம்பர் 30ம் தேதி தமிழக அரசுக்கு ஒகி புயல் குறித்து தகவல் கிடைத்தவுடன், மாவட்ட நிர்வாகங்கள் மூலம் மாவட்ட மக்களுக்கும், மீனவர்களுக்கும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தென்கடலோர மாவட்ட மீனவர்களுக்கு எச்சரிக்கை செய்தி விடுக்கப்பட்டது. தொலைத் தொடர்புக் கருவிகள் இல்லாததால் ஆழ்கடலுக்குச் சென்ற மீனவர்களுக்குத் தகவல் தர முடியவில்லை. அதேபோல, ஆழ்கடலில் தங்கி மீன் பிடிப்பவர்களுக்கும் தகவல் அளிக்க முடியவில்லை. 

ஒகி புயல் பாதித்த பிறகு, மீட்புப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு, பிற மாநிலக் கரைகளில் கரை ஒதுங்கிய 1,174 மீனவர்களுக்கு உணவுப் படியாக ரூ.2,000 வழங்கப்பட்டு அவர்கள் பத்திரமாக தமிழகம் அழைத்து வரப்பட்டனர். காணாமல் போன மீனவர்களைத் தேடிய மீனவர்களுக்குத் தேவையான எரிபொருள் மற்றும் உணவுகளையும் தமிழக அரசு வழங்கியது. பிற மாநில கரைகளில் கரை சேர்ந்தவர்களை அழைத்து வர ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் குழு நியமிக்கப்பட்டது.

அந்த வகையில், 5 ஐஏஎஸ் அதிகாரிகள் பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று தமிழக மீனவர்களைப் பத்திரமாக அழைத்து வந்தனர். ஒகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்கப் பிரதமரிடம் நேரில் வலியுறுத்தினேன். ஒகி புயல் நிவாரணப் பணிகளுக்காக மத்திய அரசு தரப்பில் ரூ.133 கோடி ரூபாய் முதற்கட்டமாக தமிழக அரசுக்கு வழங்கியது. கடைசி மீனவர் கரை திரும்பும் வரை மீட்புப் பணி தொடரும். ஒகி புயலில் சிக்கி மரணம் அடைந்த 20 மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களுக்கும், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...