டியூசனுக்கு சென்ற பள்ளி மாணவனைக் கடத்த முயற்சி

திருப்பூரில் பள்ளி மாணவனை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் கடத்திச் சென்று பின்னர் அந்த மாணவன் தப்பி வந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர், ஜனவரி 9

திருப்பூரில் பள்ளி மாணவனை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் கடத்திச் சென்று பின்னர் அந்த மாணவன் தப்பி வந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம், 15 வேலம்பாளையத்தை அடுத்த சோளிபாளையம் அருகே உள்ளது சீனிவாசா நகர். இங்கு குடியிருந்து வருபவர்கள் செந்தில்- அனுராதா தம்பதியர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் கரிகாலன் அருகில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புதான் திருப்பூருக்கு குடும்பத்துடன் குடியேறி லாரி ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். இதனால், அடிக்கடி வெளியூர் சென்றுவிடுவார். அனுராதா இரு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று மாலை சுமார் 6 மணியளவில் கரிகாலன் வழக்கம் போல் அருகில் டியூசனுக்கு சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது சைக்கிள் பஞ்சராகி விடவே தள்ளிக்கொண்டு நடந்து சென்றுள்ளார். அவ்வழியாக முகத்தை மூடியபடி மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் திடீரென கரிகாலனை வாயை பொத்தி இருசக்கரவாகனத்தில் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது ஒருகட்டத்தில் தனக்கு பின்னாள் அமர்ந்திருந்த கடத்தல்காரனின் கையை சிறுவன் கடித்துள்ளான். இதனை அடுத்து அங்குள்ள பேக்கரி முன்பாக சிறுவனை இறக்கிவிட்டு மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, அருகில் இருந்தவர்களிடம் தான் கடத்தப்பட்டு தப்பி வந்த சம்பவம் குறித்து கரிகாலன் தெரிவித்ததைத் தொடர்ந்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின், இதுகுறித்து 15 வேலம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர். மேலும், பள்ளி மாணவன் கடத்தப்பட்டதாக கூறப்படும் வீட்டருகே கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதும், அவர்கள் வெளியூர் சென்றுள்ளதாள் திரும்பி வந்த பிறகு வீடியோ பதிவுகளைக் கொண்டு விசாரணை மேற்கொள்ளப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...