உடல்பருமனுள்ள குழந்தைகளை கிண்டலடிக்கக்கூடாது : மாணவர்களுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் அறிவுரை

உடல் பருமனாக இருப்பவர்களை விமர்சிக்கவோ, கிண்டலடிக்கவோ கூடாது என பள்ளி மாணவர்களுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார்.

கோவை, ஜனவரி 09

உடல் பருமனாக இருப்பவர்களை விமர்சிக்கவோ, கிண்டலடிக்கவோ கூடாது என பள்ளி மாணவர்களுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார். 



இளம் தலைமுறைகளிடையே உடல் பருமனைத் தடுக்கும் வகையில், யங் இண்டியன்ஸ் மற்றும் ஜெம் மருத்துவமனை இணைந்து ”பள்ளிக் குழந்தைகளின் பருமன் தடுப்பு” (COPS) அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்திற்கு ஆர்க் பவுண்டேஷன் மற்றும் கோவை மாநகராட்சி முழு ஆதரவை அளித்துள்ளனர். 

இந்த நிலையில், ”கோவை விழா 2018”-ஐ யொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகக் கோவை வந்த நடிகர் சிவகார்த்திகேயன், வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார். அப்போது, அவர் பேசுகையில், ” மாணவர்கள் ஜங் உணவுகள் மற்றும் குளிர்பானங்கள் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். நான் குளிர்பானத்தை குடிப்பதை விட்டு 7 அல்லது 8 ஆண்டுகள் ஆகின்றன. குளிர்பானத்தின் நன்மை, தீமை தெரியாததால், அது தொடர்பான விளம்பரங்களில் நடிக்க மறுத்தேன். என்றார். 

இதைத் தொடர்ந்து, உடல்பருமனுக்கு எதிரான உறுதிமொழியை நடிகர் சிவகார்த்திகேயனுடன் 5,000 மாணவர்கள் ஏற்றுக் கொண்டனர். 



” மாணவர்கள் நலமான வாழ்க்கை முறை வாழவேண்டும். தினமும் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்” எனக் கோவை மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் கூறினார். 

நிகழ்ச்சியின் இறுதியில், வாழ்க்கை முறை குறித்த ’Unsung Heroes’ என்ற காலாண்டர் வெளியிடப்பட்டது. 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...