சகோதரியையும் அவரது மகளையும் கொன்று சகோதரர் தற்கொலை : கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்டதால் விபரீதம்

பண விவகாரத்தில் சகோதரி மற்றும் அவரது மகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு ஒருவர் தற்கொலை செய்த கொண்டார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த சகோதரி இன்று உயிரிழந்தார்.

கோவை, ஜனவரி 10

பண விவகாரத்தில் சகோதரி மற்றும் அவரது மகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு ஒருவர் தற்கொலை செய்த கொண்டார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த சகோதரி இன்று உயிரிழந்தார்.

கோவை நீலிக்கோணாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணி (63). ரியல் எஸ்டேட் அதிபரான இவர் தனது சகோதரி பாக்கியம் (68) என்பவரது வீட்டில் வசித்து வந்தார். அதே வீட்டில் பாக்கியத்தின் மகள் சாந்தி என்பவரும் வசித்து வந்தார். 

இந்நிலையில், ரியல் எஸ்டேட் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் தனது சகோதரி பாக்கியத்திடம் ரூ.4.5 லட்சத்தை மணி கடனாக வாங்கியுள்ளார். நீண்ட நாட்களாகியும் பணத்தை திருப்பித்தராததால் அந்த பணத்தை திருப்பித்தருமாறு மணியிடம் பாக்கியம் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். 

இதனால் மனமுடைந்த அவர், கால் வலி மருந்து என்று கூறி தேனில் விஷ மாத்திரை கலந்து நேற்று காலை பாக்கியம் மற்றும் சாந்தி ஆகிய இருவருக்கும் கொடுத்துவிட்டு தானும் அந்த விஷத்தை அருந்தியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, மூன்று பேரும் வீட்டில் மயங்கிக்கிடப்பதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சாந்தி மற்றும் மணி பரிதாபமாக உயிரிழந்தனர். 

தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பாக்கியம் இன்று காலை உயிரிழந்தார். இது தொடர்பாக, சிங்காநல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கடன் பிரச்சனையால் சகோதரி மற்றும் அவரது மகளைக் கொலைசெய்துவிட்டு சகோதரரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...