அரசின் ரூ. 750 கோடி ஒதுக்கீட்டை ஏற்க மறுப்பு: வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு ரூ.750 கோடி நிலுவைத் தொகை வழங்குவதில் பலன் இல்லை எனவும், ஊதிய உயர்வு குறித்த எந்தவித அறிவிப்பும் இடம்பெறாததால், வேலைநிறுத்தம் நீடிக்கும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

ஜனவரி 10

ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு ரூ.750 கோடி நிலுவைத் தொகை வழங்குவதில் பலன் இல்லை எனவும், ஊதிய உயர்வு குறித்த எந்தவித அறிவிப்பும் இடம்பெறாததால், வேலைநிறுத்தம் நீடிக்கும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. 

பேருந்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற அடிப்படையில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையில் ரூ.750 கோடி உடனடியாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் இன்று அறிவித்தார்.

இதனை ஏற்று பணிக்கு திரும்பும்படியும் அவர் கேட்டுக்கொண்டார். ஆனால், இதனை ஏற்றுக்கொள்ளாத தொழிற்சங்கங்கள், பேருந்து ஸ்டிரைக் தொடரும் என அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம் கூறியதாவது:- போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பிற துறையில் உள்ளவர்களுக்கு இணையாக சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். மின்சார வாரியம், ஆவின் போன்ற நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 2.57 காரணியைக் கொண்டு பெருக்கி வரும் தொகை அடிப்படை சம்பளமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இந்தப் பெருக்கத்தின் காரணியில் 13 குறைவாக 2.44 ஆக பெருக்கி வரும் தொகையை தராமல் கிடைக்கும் என்று கூறியதால்தான் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.

இந்த வேறுபாடுகள் மிகவும் குறைவானது. இதை சரிசெய்ய வேண்டும் என்று கூறி இருந்தோம். ஆனால், ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு பல ஆண்டுகளாக அவர்கள் சேமித்து வைத்திருந்த பணத்தை எடுத்து இதுவரையில் வழங்காமல் இருந்ததால் நீதிமன்றம் கடுமையாக கண்டித்ததின் பேரில் ரூ.1,700 கோடி வழங்க வேண்டிய இடத்தில் வெறும் ரூ.750 கோடி மட்டும் வழங்குவதாக செய்தி வெளியாகி உள்ளது. அதுவும் ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கி விட்டு பணியில் இருப்பவர்களுக்கு வழங்காமல் இருப்பது முதலமைச்சரின் அறியாமையைக் காட்டுகிறது. அதனால் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் தொடரும்.

சி.ஐ.டி.யு. தொழிற்சங்க தலைவர் சவுந்தரராஜன் கூறியதாவது:- தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பற்றி எதுவும் அறிவிக்கப்படவில்லை. அதற்காகத்தான் இந்தப் போராட்டம் நடக்கிறது. ஊதிய மாற்றுக் காரணி குறித்து எதுவும் கூறாமல் ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் நிலுவை தொகையை அறிவித்து இருப்பது ஏமாற்று வேலையாகும். இதனை ஏற்க இயலாது. எங்களது போராட்டம் தொடரும் என்றார்.

எச்.எம்.எஸ். தொழிற்சங்க சுப்பிரமணியம் கூறுகையில், நிலுவை தொகை எங்களுக்கு வர வேண்டியதுதான். அது பிரச்சனை இல்லை. 2.57 மாற்றுக் காரணி சம்பள உயர்வு வழங்க வேண்டும். 2003-ல் பணியில் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்புநிதி வழங்கப்படவில்லை. இதனைக் கொடுக்க வேண்டும். அதுவரையில் போராட்டம் தொடரும் என்றார். 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...