கோவில் உண்டியலை உடைத்து ரூ. 45 ஆயிரம் கொள்ளை

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கோவில் உண்டியலை உடைத்து ரூபாய் 45 ஆயிரம் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

திருப்பூர், ஜனவரி 10

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கோவில் உண்டியலை உடைத்து ரூபாய் 45 ஆயிரம் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த காமநாயக்கன் பகுதியில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பங்குனி மாதம் வெகு விமர்சையாக திருவிழா நடத்துவது வழக்கம். சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து இங்கு வரும் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழா நடப்பதற்கு முன்பாக எண்ணப்படுவது வழக்கம்.



இந்நிலையில், இன்று (ஜன. 10) காலை கோவிலுக்குச் சென்ற பக்தர்கள் கோவில் உண்டியல் உடைந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

இதில், கோவிலின் பின்புற சுவற்றின் மீது ஏறி உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த வேலால் உண்டியலின் பூட்டை உடைத்து அதிலிருந்த சுமார் 45 ஆயிரம் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்துச் சென்றிருப்பது கண்டறியப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்த போலீசார் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...